RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

129991856

தமிழ்நாடு, காமராஜர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கியின், ‘மேற்பார்வை செயல் கட்டமைப்பு’, ‘மூலதனம் போதுமான அளவு பற்றிய ப்ருடென்ஷியல் விதிமுறைகள்’ (நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்) மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்’ விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜனவரி 03, 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், காமராஜர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி (வங்கி) மீது ₹2.00 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

மார்ச் 31, 2023 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:

  1. வங்கி, ‘மேற்பார்வை செயல் கட்டமைப்பின்’ வழிகாட்டல்களுக்கு மாறாக, தனிநபர் கடன் பெறுவதற்கான வரைமுறைகளுக்கு அப்பாற்பட்ட கடன் வசதிகளும், 100% க்கும் அதிகமான இடர் மதிப்பீடு கொண்ட புதிய கடன்கள் மற்றும் முன்பணங்களும் அளித்துள்ளது.
  2. வங்கி, அதன் சி.ஆர்.ஏ.ஆர் ஒழுங்குமுறை குறைந்தபட்சத்தை விட குறைவாக இருந்தபோதிலும், கடன் வாங்குவதை இணைக்கும் பங்கு விதிமுறைகளுக்கு இணங்காமல் சில கடன்களை அனுமதித்தது
  3. வங்கி, அதன் சி.ஆர்.ஏ.ஆர் ஒழுங்குமுறை குறைந்தபட்சத்தை விட குறைவாக இருந்தபோதிலும், அதன் உறுப்பினர்களுக்கு பங்கு மூலதனத்தைத் திரும்பப் பெற அனுமதித்தது; மற்றும்
  4. வங்கி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களின் KYC தரவுகளை மத்திய KYC பதிவேட்டில் பதிவேற்றவில்லை.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(புனீத் பஞ்சோலி)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2024-2025/1917

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?