தமிழ்நாடு, ஸ்ரீரங்கம் கூட்டுறவு நகர வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தமிழ்நாடு, ஸ்ரீரங்கம் கூட்டுறவு நகர வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கியின், ‘இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குவது’ தொடர்பான உத்தரவுகள் மற்றும் ‘மேற்பார்வை செயல் கட்டமைப்பின்’ கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 05, 2024 தேதியிட்ட உத்தரவு மூலம், ஸ்ரீரங்கம் கூட்டுறவு நகர வங்கி (வங்கி) மீது ₹1,50,000 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.
மார்ச் 31, 2023 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் தனிப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது: i. வங்கி, தனது இயக்குனர்களின் உறவினர்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது ii. வங்கி, ‘மேற்பார்வை செயல் கட்டமைப்பின்’ வழிகாட்டல்களுக்கு மாறாக வாராக் கடன் சதவிகிதம் அதிகமுள்ள துறைகளுக்கு கடன் வசதிகளை வழங்கியுள்ளது மற்றும் இடர் மதிப்பீடு 100% மேல் இருக்கும் கடன்களை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. (புனீத் பஞ்சோலி) பத்திரிகை வெளியீடு: 2024-2025/1450
|