ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது
நவம்பர் 23, 2016 ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் நவம்பர் 23, 2016 முதல், ஒரு பேமென்ட் வங்கியாகத் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு எண் 22 (1)-ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு இந்தியாவில் பேமென்ட் வங்கியாக செயல்படுவதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 19, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி, பேமென்ட் வங்கிகள் தொடங்க விண்ணப்பித்திருந்த 11 விண்ணப்பதாரர்களுக்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்டது. அவற்றுள் ஏர்டெல் M காமர்ஸ் சர்வீஸஸ் லிமிடெட்டும் ஒன்றாகும். (அனிருத்தா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1301 |