பல்வேறு மதிப்புடைய எல்லா நாணயங்களும் ஏற்புடைய செலாவணியே
செப்டம்பர் 16, 2004
கடை உரிமையாளர்கள், வணிகர்கள், ஊர்தி இயக்குவோர், அரசாங்கத் துறைகள் போன்ற பிற பிரிவினரும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை ஏற்க மறுத்து அவை ஏற்புடைய செலாவணி அல்ல எனவும் அவற்றை வங்கிகள் பெற்றுக்கொள்ள மறுகின்றன எனவும் அறிக்கைகள் வெளியாவதை இந்திய ரிசர்வ் வங்கி அறிவதோடு அது தொடர்பாக புகார்களையும் அது பெற்றுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காக, எல்லாவகையான நாணயங்களும் 25 பைசா, 50பைசா நாணயங்கள் உட்பட ஏற்புடையனவே; தொடர்ந்து அந்த நிலை நீடிக்கும் என எவர் கூறினாலும் அது சரியல்ல. இந்திய ரிசர்வ் வங்கி எல்லா வணிகமுறை வங்கிகளையும் தடையின்றி அந்நாணயங்களை ஏற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக பணத்தாள் தர அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களும் தொடர்ந்து தடையின்றி பணத்தாள் பெற இந்நாணயங்களை ஏற்கும்.
பொதுமக்கள், 25 பைசா, 50 பைசா நாணய புழக்கத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது எனும் வதந்தியை நம்பக்கூடாது. 25 பைசா 50பைசா நாணயங்கள் ஏற்புடைய நாணயங்கள் இந்நிலை தொடர்ந்து நீடிக்கும்.
பி.வி.சதானந்தன்
மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2003-2004/307
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: