RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78438575

அன்புடையீர் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் வினியோகம் - அகவிலை நிவாரணத்த்ற்கு பணம் வழங்கீடு

RBI/2005-06/296

DGBA.GAD.NO.H.11303/45.01.003/2005-06 பிப்ரவரி 06, 2006

ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அனைத்து வங்கிகளுக்கும்
(இணைக்கப்பட்ட பட்டியலின்படி)

அன்புடையீர் பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் வினியோகம் - அகவிலை நிவாரணத்த்ற்கு பணம் வழங்கீடு

 அரசாங்கம் அவ்வப்போது அறிவிக்கும் அகவிலை நிவாரணம் மற்றும் மற்ற படிகளை விடுவிப்பதில் முகைமை வங்கிகள் தாமதமாக நடந்துகொள்வதாக ஓய்வூதியதாரர்களிடமிருந்து அண்ணற்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்த வண்ணம் உள்ளது.

2. அகவிலை நிவாரணம் மற்றும் மற்ற படிகளை பற்றி அரசாங்கம் வெளியிடும் ஆணைகளுக்கும் செயல்படுத்துவதற்கும் உள்ள கால இடைவெளியை அகற்ற ஒய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. Dgba.gad.no.h-506/45.01.001/2002-03 மற்றும் dgba.gad.h-177/45.01.003/2004-05 முறையே 2003 ஏப்ரல் 12 மற்றும் 2004 செப்டெம்பர் 8 தேதியிட்ட சுற்றறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதன்படி அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தகைய ஆணைகளின் மேல் நேரடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்த ஆணைகளை, த்பால் / ந்கல்னுப்பி/மின்னணு அஞ்சல் மூலமாகவோ அல்லது ஓய்வூதியப் பணம் கொடுக்கும் அதிகாரம் பெற்றவர்களின் அதற்குரிய இணையதளத்திலிருந்தோ பெற்று ரிசர்வ் வங்கியின் மேலும் உத்தரவுகளுக்கு காத்திராமல், உடனே செயல்பட வேண்டும்.

3. ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகள் அரசாங்கத்தின் ஆணைகளின் பிரதிகளை உடனே பெற்று, மறுமுனையில் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிக்கிளைகளுக்கு விநியோகம் செய்திட ஒரு முறைமையை ஏற்படுத்திடுமாறும் மீண்டும் ஒருமுறை வேண்டிக்கொள்கிறோம். ஓயவூதியதாரர்கள், அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் நன்மைகளை, அதைத் தொடர்ந்து வரும் மாதத்தின் ஓய்வவூதியத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதே நோக்கமாகும்.

முகைமை வங்கிகளின் தலைமை அலுவலங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகங்கள், தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு அரசு ஓய்வூதியம் சரியான முறையில் குறித்த நேரத்தில் வழங்கப்படுதிறதா என்பதை கண்காணிக்கவும் மேற்பார்வையும் செயய வேண்டும்.

4. மத்திய பொது மற்றும் ரயில்வே ஓய்வூதியதாரர்கள் விஷயத்தில், பற்று வரவு கணக்கேட்டின் முதல் பககத்தில் நியமிக்கப்பட நபர்களின் பெயர்களை நியமன படிவங்கள் A மற்றும் B யின்படி புறக்குறிப்பாக எழுதும்படி ஓய்வூதியம் அளிக்கும் வங்கிகளை நாங்கள் அறிவுறுத்துகிறோம். பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வினியோகிக்கும் திட்டங்களின் நடைமுறைகள் கவனமாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதனை வங்கிக்கிளைகள் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

5. ஓய்வூதியம் அளிப்பதில் உள்ள திட்டங்கள்/விதிகள் ஆகியவைகளைப் பற்றிய நல்ல விழிப்புணர்வை, வங்கி ஊழியர்களுக்கு ஏற்படுத்த, அவர்களுடைய பயிற்சி நிலையங்களில் அதை உள்ளடக்கிய பயிற்சி அமைப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மதிப்பிடும்போது ஓய்வூதிய விதிகளைப் பற்றிய அறிவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

6. இவ்விஷயத்தில் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

உங்கள் நம்பிக்கைகுரிய

 

(M.T. வர்கீஸ்)
பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?