ஷிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் – கோலாபூர், மகாராஷ்டிராக்கு வழங்கப்பட்ட வழிக்காட்டுதல் உத்தரவுகளின் கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
ஷிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் – கோலாபூர், மகாராஷ்டிராக்கு வழங்கப்பட்ட வழிக்காட்டுதல் உத்தரவுகளின் கால நீட்டிப்பு
அக்டோபர் 17, 2019 ஷிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் – கோலாபூர், இந்திய ரிசர்வ் வங்கி (DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 தேதியிட்ட உத்தரவு) –இன் படி ஷிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் – கோலாபூர், மகாராஷ்டிராவை மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைத்தது. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உட்பிரிவு (1) உடன் இணைந்தப்பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிகாட்டு உத்தரவுகளை அக்டோபர் 15, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/D-29/12.22.351/2019-20 உத்தரவின் படி நவம்பர் 30, 2019 வரை மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டித்துள்ளது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது. மேற்கண்ட கால நீட்டிப்பைத் தெரிவிக்கும் வழிகாட்டு உத்தரவின் நகல் பொது மக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்த உத்தரவுகளின் கால நீட்டிப்பு மற்றும்/அல்லது மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளதால் வங்கியின் நிதிநிலைமை குறித்து இந்தியரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு : 2019-2020/976 |