சிவம் சகாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, கோலாப்பூர் மாவட்டம் மகாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் - கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
சிவம் சகாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, கோலாப்பூர் மாவட்டம் மகாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் - கால நீட்டிப்பு
நவம்பர் 29, 2019 சிவம் சகாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, கோலாப்பூர் மாவட்டம் இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி) சிவம் சகாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, கோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா நிறுவனத்தை மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நவம்பர் 28, 2019 தேதியிட்ட DOR.CO.AID/D-41/12.22.351/2019-20 உத்திரவின்படி மேற்கூறிய உத்தரவு ஜனவரி 31, 2020 ஆம் தேதி வரை வங்கிக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. 3. மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். 4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல், வங்கியின் நிதி நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைவதைக் குறிக்காது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1301 |