1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா
ஜூலை 01, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா, ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-06/12.22.311/2018-19 உத்தரவுகளின் படி, ஜனவரி 05, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக ஜனவரி 01, 2020 தேதியிட்ட DOR.CO.AID/D-46/12.22.311/2019-20 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜூலை 05, 2020 வரை நீட்டிக்கப்பட்டது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கிய ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-06/12.22.311/2018-19 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக ஜூலை 05, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 29, 2020 தேதியிட்ட DOR.CO.AID/D93/12.22.311/2019-20 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜூலை 06, 2020 முதல் ஜனவரி 05, 2021 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். 3. மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் ஜூன் 29, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். 4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/4 |