1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சர்ஜெராவ்தாதா நாயக் ஷிராலா சஹகாரி பாங்க் லிமிடெட், ஷிராலா, சங்லி மாவட்டம், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சர்ஜெராவ்தாதா நாயக் ஷிராலா சஹகாரி பாங்க் லிமிடெட், ஷிராலா, சங்லி மாவட்டம், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஆகஸ்ட் 03, 2021 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A சர்ஜெராவ்தாதா நாயக் ஷிராலா சஹகாரி பாங்க் லிமிடெட், ஷிராலா, சங்லி மாவட்டம், மகாராஷ்டிரா, பிப்ரவரி 03, 2021 தேதியிட்ட DOS.CO.UCBs-West/D-1/12.07.157/2020-21 உத்தரவுகளின் படி, பிப்ரவரி 03, 2021 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து, ஆறு மாத காலத்துக்கு, வழிகாட்டு உத்தரவுகளின் கீழ்வைக்கப் பட்டது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 02, 2021 தேதியிட்ட DOR.MON/D-25/12.07.157/2021-22 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு, மேற்கண்ட உத்தரவுகளை நவம்பர் 03, 2021 வரை தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. 3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் யாவும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் ஆகஸ்ட் 02, 2021 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. 4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்கள், வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது. (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2021-2022/631 |