1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுஉத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா – வைப்புதாரர்கள் பணம் திரும்பப் பெரும் வரம்பில் உயர்வு - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுஉத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா – வைப்புதாரர்கள் பணம் திரும்பப் பெரும் வரம்பில் உயர்வு
ஜூன் 19, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் வைப்புதாரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா நிறுவனம் ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D6/12.22.311/2018-19 உத்தரவின்படி ஜனவரி 05, 2019 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் விதிகளின்படி அனைத்து உள்ளடக்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. நடைமுறையில் உள்ள வழிகாட்டு உத்தரவுகளின்படி ஒவ்வொரு வைப்புதாரரின் பணம் திரும்பப் பெரும் வரம்பு ரூ. 5000 ஆக உள்ளது. வங்கியின் பணப்புழக்க நிலை மற்றும் வைப்புதாரர்களுக்கு பணம் திரும்ப செலுத்தும் திறனை மதிப்பாய்வு செய்ததில் முன்னர் அனுமதித்திருந்த ரூ. 5000 உட்பட ஒவ்வொரு வைப்புதரரின் பணம் திரும்பப் பெரும் வரம்பை ரூ. 20,000 (ரூபாய் இருபதாயிரம்) ஆக உயர்த்த ஜூன் 19, 2020 தேதியிட்ட DOR.CO.AID No.D-90/12.22.311/2019-20 உத்தரவின்படி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளர்வின் மூலம் வங்கியின் 76% க்கும் மேற்பட்ட வைப்புதாரர்கள் தங்களின் மொத்த நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற முடியும். அவ்வபோது மாற்றியமைக்கப்பட்ட, பார்வையில் உள்ள, உத்தரவின் மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2527 |