வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டு உத்திரவுகள் – ருபீ கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டு உத்திரவுகள் – ருபீ கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா
தேதி: மே 31, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டு மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள ருபீ கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், பிப்ரவரி 22, 2013 வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 22, 2013 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது அடுத்தடுத்த உத்தரவுகளில் நீட்டிக்கப்பட்டு, கடைசியாக பிப்ரவரி 25, 2019 தேதியிட்ட உத்தரவு மதிப்பாய்வுக்கு உட்பட்டு மே 31, 2019 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கிய பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட உத்தரவு, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, இதன் செல்லுபடியாகும் தன்மை கடைசியாக மே 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டு, மேலும் மே 27, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்வுக்கு உட்பட்டு, ஜூன் 01, 2019 முதல் ஆகஸ்ட் 31, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது, என்பது பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள உத்தரவுகளின் மற்ற எல்லா விதிமுறைகளும் மாற்றங்களும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் மே 27, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் ஆய்வுக்காக வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் அடைந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2829 |