வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டு உத்தரவுகள் - ஸ்ரீ பாரதி கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், ஹைதராபாத், தெலுங்கானா – செயல்பாட்டுக்காலம்/ செல்லுபடியாகும் கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டு உத்தரவுகள் - ஸ்ரீ பாரதி கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், ஹைதராபாத், தெலுங்கானா – செயல்பாட்டுக்காலம்/ செல்லுபடியாகும் கால நீட்டிப்பு
ஜூலை 09, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த 35 A பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஸ்ரீ பாரதி கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட் நிறுவனம் ஹைதராபாத், தெலுங்கானாவிற்கு பொது நலனுக்காக வழிகாட்டு அறிவுறுத்தல்களை வழங்கியது. இவ்வுத்தரவுகள் ஜனவரி 02, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து நடைமுறையில் இருந்தன, மேலும் அவை மறு ஆய்வுக்கு உட்பட்டு ஜூலை 02, 2019 வரை செல்லுபடியாகும். இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ பாரதி கோஆப்ரேட்டிவ் அர்பன் பாங்க் லிமிடெட், ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு வழங்கப்பட்ட உத்தரவின் செயல்பாட்டு காலத்தை பொது நலன் கருதி ஜூலை 03, 2019 முதல் ஜனவரி 02, 2020 வரை மதிப்பாய்வுக்கு உட்பட்டு, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். உத்தரவின் நகல் பொதுமக்களின் கவனத்திற்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/93 |