வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிமுறைகள் - சி.கே.பி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
தேதி: பிப்ரவரி 28, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள மும்பை, மகாராஷ்டிராவில் உள்ள சி.கே.பி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஏப்ரல் 30, 2014 வர்த்தகம் முடிவுற்ற தேதியிலிருந்து, மே 2, 2014 தேதியிட்ட் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக நவம்பர் 27, 2018 தேதியிட்ட உத்தரவின்படி இவ்வுத்திரவுகள் பிப்ரவரி 28, 2019 வரை செல்லுபடியாகும். இது பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கப்படுவது யாதெனில் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1)உடன் இணைந்தத பிரிவு 56இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக அதன் செல்லுபடியாகும் தன்மை பிப்ரவரி 28, 2019 வரை நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 26, 2019தேதியிட்ட உத்தரவின்படி மறு ஆய்வுக்குட்பட்டு இந்த உத்தரவு மார்ச் 1, 2019 முதல் மே 31, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து செல்லுபடியாகும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2059 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: