வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
தேதி: மே 31, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள மும்பை, மகாராஷ்டிராவில் உள்ள சி.கே.பி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மே 2, 2014 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஏப்ரல் 2, 2014 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்படுள்ளது. உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அடுத்தடுத்த உத்தரவுகளில் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கடைசியாக பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்வுக்கு உட்பட்டு மே 31, 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இநைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக மே 31, 2019 வரை நீட்டிக்கப்பட்ட உத்திரவின் செல்லுபடியாகும் தன்மை மே 30, 2019 தேதியிட்ட வழிகாட்டுதல்களின் படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு, ஜூன் 01,2019 முதல் ஜூன் 30, 2019 வரை ஒரு மாத காலத்திற்கு வங்கிக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்பது பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் மே 30, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் கவனத்திற்கு வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2832 |