1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
செப்டம்பர் 30, 2019 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட உத்தரவின் படி ஆகஸ்ட் 30, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக மார்ச் 25, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறுஆய்வுக்கு உட்பட்டு செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட உத்தரவு, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்திருந்த நிலையில், இதன் செல்லுபடி காலம் செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 01, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது. மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/816 |