1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
அக்டோபர் 25, 2019 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் மும்பை, மகாராஷ்டிரா அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவின்படி ஆறு மாத காலத்திற்கு, மறு ஆய்வுக்கு உட்பட்டு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. இந்த வழிகாட்டு உத்தரவுகளின் செயல்பாட்டுக் காலம் கடைசியாக ஏப்ரல் 24, 2019 தேதியிட்ட உத்தரவின்படி அக்டோபர் 29, 2019 வரை ஆறு மாத காலத்திற்கு மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35(1) உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவு, கடைசியாக அக்டோபர் 29, 2019 தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், மறு ஆய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 16, 2019 தேதியிட்ட உத்தரவின்படி அக்டோபர் 29, 2019 முதல் ஏப்ரல் 29, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது. வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் அக்டோபர் 16, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதால், வங்கியின் நிதிநிலைமையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது. யோகேஷ் தாயால் பத்திரிக்கை வெளியீடு : 2019-2020/1030 |