வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - ஆர்.எஸ். கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - ஆர்.எஸ். கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
ஜூலை 10, 2018 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் ஆர்.எஸ். கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, வர்த்தகம் முடிவுற்ற நாளான ஜூன் 26, 2015 தேதியிலிருந்து ஜூன் 24 , 2015 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு உத்தரவுகள் செல்லுபடியாகும் காலம், அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது, கடைசியாக ஜனவரி 19, 2018 தேதியிட்ட உத்தரவின்படியும் மற்றும் மறு ஆய்வுக்கு உட்பட்டு ஜூலை 25, 2018 வரை நீட்டிக்கப்பட்டது . இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் நலன் கருதி, ஆர்.எஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, வங்கிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜூன் 24, 2015தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவு ஜூலை 25, 2018 வரை நீட்டிக்கப்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் செய்து, கடைசியாக ஜனவரி 19, 2018 தேதியிட்ட வழிகாட்டுதலின்படி கால அளவை, மேலும் ஆறு மாதங்களுக்கு ஜூலை 26, 2018 முதல் ஜனவரி 25, 2019 வரை மறுஆய்விற்கு உட்பட்டு ஜூலை 02, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, நீட்டித்துள்ளது. மேற்கண்ட மாற்றங்களை அறிவிக்கும் ஜூலை 02, 2018 தேதியிட்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் கவனத்திற்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதப்படாது. அஜித் பிரசாத் பத்திரிக்கை வெளீயீடு: 2018-2019/90 |