1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டு உத்தரவுகள் – யுனைடெட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன் ஸ்டேஷன் ரோடு(வடக்கு), பி.ஓ-பாக்னன், மாவட்டம் – ஹௌரா, பின் – 711 303, மேற்கு வங்கம் – கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டு உத்தரவுகள் – யுனைடெட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன் ஸ்டேஷன் ரோடு(வடக்கு), பி.ஓ-பாக்னன், மாவட்டம் – ஹௌரா, பின் – 711 303, மேற்கு வங்கம் – கால நீட்டிப்பு
அக்டோபர் 22, 2019 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உட்பிரிவு (1) உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி, யுனைடெட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன், மேற்கு வங்கத்திற்கு ஜூலை 18, 2018 அன்று வர்த்தக முடிவிலிருந்து விதிக்கப்பட்டிருந்த வழிகாட்டு உத்தரவுகள் அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டு கடைசியாக அக்டோபர் 18, 2019 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, இந்த உத்தரவுகளை அக்டோபர் 19, 2019 முதல் ஏப்ரல் 18, 2020 வரை மேலும் ஆறு மாதக் காலத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுகளால் மேற்கண்ட வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கருதக்கூடாது. வங்கியின் நிதி நிலைமை முன்னேறும் வரை வங்கி வர்த்தகங்களைக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைப் பரிசீலிக்கலாம். யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு : 2019-2020/1001 |