வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - காரத் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட், காரத், மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - காரத் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட், காரத், மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு
தேதி: மார்ச் 08, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A உடன் இணைந்த நவம்பர் 7, 2017 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவின் பேரில் காரத் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட், காரத் நவம்பர் 9, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்திருந்த நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கூறிய வழிகாட்டு உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 30, 2018 தேதியிட்ட உத்தரவின்படி மார்ச் 9, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவலுக்காக 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் பிரிவு 56 ன் இணைந்த பொருளின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட நவம்பர் 7, 2017 தேதியிட்ட உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை அக்டோபர் 30, 2018 தேதியிட்ட உத்தரவின்படி நீட்டிக்கப்பட்டு, மறு பரிசீலனைக்குட்பட்டு மார்ச் 10, 2019 முதல் செப்டம்பர் 9, 2019 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து செல்லுபடியாகும் என இதன் மூலம் தெரிவிக்கபடுகிறது. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் மார்ச் 7, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் செய்தி வெளியீடு: 2018-2019/2138 |