ஈ.எஸ்.ஏ.எஃப் (ESAF) சிறுநிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது - ஆர்பிஐ - Reserve Bank of India
ஈ.எஸ்.ஏ.எஃப் (ESAF) சிறுநிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது
மார்ச் 10, 2017 ஈ.எஸ்.ஏ.எஃப் (ESAF) சிறுநிதி வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது மார்ச் 10, 2017 முதல் ஈ.எஸ்.ஏ.எஃப் (ESAF) சிறுநிதி வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு சிறு நிதி வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது. செப்டம்பர் 16, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி சிறுநிதி வங்கியை அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 10 விண்ணப்பதாரர்களில் ஈ.எஸ்.ஏ.எஃப் (ESAF) மைக்ரோ ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையும் ஒன்றாகும். (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2422 |