500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – மோசடியான செயல்பாடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – மோசடியான செயல்பாடுகள்
அறிவிப்பு எண் 147 நவம்பர் 22, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி மேற்குறிப்பிட்ட வங்கி நோட்டுகளைப் பணமாக மாற்றும்போதோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்போதோ, சில வங்கி அதிகாரிகள், சில மோசடிப் பேர்வழிகளின் துணையுடன் மோசடியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. 2. ஆகவே, வங்கிகள் இத்தகு மோசடியான செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்திடவேண்டும். மேலும், கூர்ந்த கண்காணிப்பின் மூலம் இத்தகு மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 3. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தல் மற்றும் முகப்புகளில் மாற்றுதல் குறித்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை, வங்கிகள் ஒழுங்காக கடைபிடிப்பது உறுதிப்படுத்தப் படவேண்டும். இதன்பொருட்டு, வங்கிக் கிளைகள் கீழ்க்கண்டவற்றிற்கான பதிவுகளைப் பராமரித்தல் அவசியம்.
வங்கிகள் மேற்குறிப்பிட்ட இத்தகவல்களை குறுகிய கால அவகாசத்தில் உடனடியாக அளித்திடத் தயார்நிலையில் இருக்கவேண்டும். 4. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும். இங்ஙனம் (P. விஜய குமார்) |