இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது
ஜனவரி 30, 2017 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் செயல்படத் தொடங்கியது ஜனவரி 30, 2017 முதல் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் வங்கி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இதன்பொருட்டு, பேமென்ட்ஸ் வங்கியாக இந்தியாவில் செயல்படுவதற்குரிய உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 22 (1)-ன் கீழ் இதற்கு அளித்துள்ளது. ஆகஸ்டு 19, 2015 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி பேமென்ட்ஸ் வங்கி அமைப்பதற்குக் கொள்கை அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்ட 11 விண்ணப்பதாரர்களில் போஸ்டல் துறையும் ஒன்றாகும். (அனிருத்தா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2030 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: