உட்பதிந்த எழுத்து இல்லாமல், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாத ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
உட்பதிந்த எழுத்து இல்லாமல், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாத ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
செப்டம்பர் 23, 2016 உட்பதிந்த எழுத்து இல்லாமல், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாத ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில், நோட்டின் முன்புறம் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பதிந்த எழுத்து இல்லாமல், ஆளுநர் Dr. ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2016“ என்பது அச்சடிக்கப்பட்ட ₹ 20 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை சார்ந்த ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை ஒத்தவை. நோட்டிலுள்ள இரண்டு வரிசை எண்களும் வடிவத்தில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை ஏறுமுகமாகவும், தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாமலும்,மறைந்திருக்கும் பிம்பம் இன்றி, அடையாளக் குறியீடு இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும். தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாத்தால் பின்புறம் நோட்டுகளின் வர்ணம் சிறிது மங்கலாக இருக்கும். (Ref. Press release No. 2016-17/678 dated September 15, 2016) இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/757 |