RBI/2009-2010/77 UBD.PCB-MC.No.2/09.22.010/2009-10 ஜூலை 1, 2009 அனைத்து தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகளுக்கும் அன்புடையீர், வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் - நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை எண் UBD. BPD (PCB)MC.No.2/09.22.010/2008-2009 ஜூலை 1, 2008 தேதியிட்டதைப் பார்வையிடுக. (ரிசர்வ் வங்கி இணையதளம் www.rbi.org.in ஐப் பார்க்கலாம்). ஜுன் 30, 2009 நாள் வரை வெளியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு இந்த தொகுப்புச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ளன. 2. கிடைக்கப்பெற்றமைக்கான ஒப்புதலை உரிய ரிசர்வ் வங்கியின் பிராந்தியக் கிளைக்கு அனுப்பவும் தங்கள் உண்மையுள்ள A.K. ஹுண்ட் தலைமைப் பொதுமேலாளர் (பொறுப்பு) தொகுப்புச் சுற்றறிக்கை வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி பொருளடக்கம்
- பொதுவானவை
- கடன்வாங்கத் தகுதியுள்ளோர்
- கடனுக்கான தகுதியான திட்டங்கள்
- வீட்டுவசதிக் கடனுக்கான சட்டவிதிகளும் நிபந்தனைகளும்
4.1. அதிகபட்ச கடன்தொகை மற்றும் கடனிழப்பீட்டுத் தொகை 4.2. வட்டி 4.3. தண்டனை வட்டி விதித்தல் 4.4. கடனுக்கான அடமான சொத்து 4.5. கடனின் கால அளவு 4.6. படிப்படியான தவணைத் தொகை 4.7. வீட்டுவசதி நிதியுதவிக்கான மொத்த வரம்பு
- கூடுதல்/இணை கூட்டான நிதியுதவி
- வீட்டுவசதி வாரியங்களுக்கு கடனளித்தல்
- வீடுகட்டுவோர்/ஒப்பந்ததாரருக்கு கடன்வசதிகள்
- முன்னுரிமைப்பிரிவிலுள்ள வீட்டுவசதிக் கடன்கள்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- தேசியவீடுகட்டும் விதிமுறைகள்
பின்னிணைப்பு....1 பின்னிணைப்பு......... தொகுப்புச் சுற்றறிக்கை வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவி
- பொதுவானவை
- வீட்டுவசதிக்கான நிதியுதவி அளிப்பதில் தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பு என்பது அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிகள் தங்களின் பெருவாரியான இணைப்புத் தொகுப்பினால், நிதிசார்ந்த துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்வதோடு, வீட்டுவசதித் துறைக்கு, கடனளிப்பதிலும் முக்கியப் பங்காற்ற வேண்டும். சில குறிப்பிட்ட வகையினருக்கு, குறிப்பிட்ட வரம்பு வரை வீட்டுவசதிக்காக கடனளிப்பது என்பது முன்னுரிமைக் கடன் பிரிவில் சேர்வதாகக் கருதப்படுகிறது. முன்னுரிமை பிரிவினை சார்ந்தோருக்கு தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் கடனளிப்பு என்பது வங்கித்துறையிலுள்ள சமுதாய ரீதியான கோட்பாடுகளுக்கு இயைபுடைய ஒன்றாகக் கருதப்படுகிறது.
- ஆகையால், தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் இதில் ஊக்கத்தோடு தத்தம் பங்களிப்பை அளித்திடல் வேண்டும். ஆகவே அதற்கு ஏதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தங்களின் நிதி ஆதாரங்களிலிருந்தே, ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வீட்டுவசதி திட்டங்களுக்கு கடனுதவி அளித்திட, அதுவும் குறிப்பாக நலிவுற்ற பிரிவினருக்கு அளிக்க அனுமதி அளித்திட வேண்டும்.
- நல்ல வருமானம் பெறும் வழிமுறையாதலால், பெரிய வங்கிகள் தங்களின் உபரி இருப்பு நிதிகளை வீட்டுவசதிக்காக பெரிய அளவில் கடனுதவி அளித்திட முன்வரவேண்டும்.
- வங்கிகள் வீட்டு வசதிக்கடனுதவி அளிக்கும் வேளையில், அமைப்பின் பதிவாளரிடமும் சிறப்பு அனுமதி ஒவ்வொரு முறையும் பெற நேரிடுவதால், வங்கிகள் இதன்பொருட்டு பின்பற்ற வேண்டிய கட்டளைகள், கருத்துகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவற்றை பூர்த்தி செய்து, பொதுவான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. கடன்பெறத் தகுதியுடையவர்கள் 2.1 நகர கூட்டுறவு வங்கிகள் கீழ்க்கண்ட வகையான கடனாளிகளுக்கு கடன் அளிக்கலாம்.
- தனிநபர்கள் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி அங்கத்தினர்கள்
- நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதிதிட்டங்களை அமல்படுத்தும் வீட்டுவசதி வாரியங்கள், குறைந்த நடுத்தர வருவாய் வகுப்பினர் மற்றும் நடுத்தர வருவாய் வகுப்பினருக்கான வீட்டுவசதித்திட்டங்கள்.
- வீட்டை விரிவாக்கக் கட்டுதல், மேம்படுத்துதல், முக்கிய மராமத்துப்பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள்.
3. தகுதிபெற்ற வீட்டுவசதித்திட்டங்கள் 3.1. பின்வரும் வீட்டுவசதித் திட்டங்களுக்கான முன்னர் குறிப்பிடப்பட்ட பிரிவினர் வங்கிக்கடன் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
- வீடு மற்றும் குடியிருப்பினைக் கட்டும் அல்லது நேரடியாக வாங்கும் தனிநபர்கள்
- வீடு/குடியிருப்பினை மராமத்து, மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யும் தனிநபர் உரிமையாளர்கள்
- வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டுமானப்பணிகள் இவற்றை மேற்கொள்ளும் பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடி இனத்தவர்
- குடிசைமாற்று திட்டங்களில்
a. அரசின் உத்தரவாதத்தின் பேரில் நேரிடையாகக் குடிசைவாழ் மக்களுக்கும் b. மறைமுகமாக இத்தகு பணிக்கென அமைக்கப்பட்ட வாரியங்களுக்கும் கடனுதவி அளிக்கலாம்.
- கல்வி, சுகாதாரம், சமூகநலம், கலை இலக்கியம் சார்ந்த நிறுவனங்கள்/அமைப்புகள், குடியிருப்புகள் அமைத்திட அல்லது அவற்றை மேம்படுத்த மேற்கொள்ளும் வீட்டுவசதித் திட்டங்கள்
- குடியிருப்புகள் சார்ந்த இடங்களில், திட்டத்தின் ஒரு அங்கமாக, குடியிருப்போரின் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்திட கடைகள் மற்றும் சந்தைகள் அமைத்திட திட்டம்.
4. வீட்டுவசதிக் கடன்களுக்கான கருத்துக்கள் மற்றும் கட்டளைகள் தகுதியான வீட்டுவசதிக் கட்டமைப்புகளுக்கு தகுதியான நபர்களுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் கடனுதவி அளிக்கும்போது பின்வரும் கருத்துக்களையும் கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 4.1. அதிகபட்ச கடன் தொகை மற்றும் கடனிழப்பீட்டு ஈடு தொகை (Margin)
- கடனாளிகளின் திருப்பித்தரும் தகுதியைப் பொறுத்து நகர கூட்டுறவு வங்கிகள் தங்களின் வணிகநிலைப்பாட்டு யூகங்களைப் பிரயோகித்து, விவேகமான வணிக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வங்கியின் நிர்வாகிகள் குழுமத்தின் ஒப்புதலோடு, கடனாளிகளை அடையாளங்கண்டு தன்னிச்சையாக, வீட்டுவசதிக் கடன்களை வழங்கலாம்.
- ஒரு குடியிருப்பு உரிமையாளருக்கு வங்கிகள் அதிகபட்சம் ரூ;25 லட்சம் வரை கடனுதவி அளிக்கலாம். எனினும், இரண்டாம் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் ( முதல் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் அல்லாத, அனைத்து இதர கூட்டுறவு வங்கிகளும்). ஒரு குடியிருப்பிற்கு தற்போதுள்ள விவேக வரையறைக்குட்பட்டு அதிகபட்சமாக ரூபாய் 50 லட்சம் வரை தனிப்பட்ட வீட்டுவசதி கடன் வழங்கலாம்.
- வங்கிகள் தனது மொத்த மூலதன நிதியத்தில் 15%ற்கு மிகாமல் ஒரு தனிநபருக்கும், கூட்டான கடனாளிகளுக்கு குழுவாக மொத்தம் 40%ற்கு மிகாமலும் கடனுதவி வழங்கலாம். மொத்த மூலதன நிதியத்தை கணக்கிடும்போது முதல் அடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மூலதனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
* கீழ்க்கண்ட முறையில் முதல் அடுக்கு நகர கூட்டுறவு வங்கிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன:
- தனியொரு மாவட்டத்தில் செயல்படும் 100 கோடிக்கும் கீழ் வைப்புத் தொகைகள் உள்ள வங்கிகள்
- ரூபாய் 100 கோடிக்கும் கீழ் வைப்புகளுடன் ஒன்றுக்குமேற்பட்ட மாவட்டங்களில் செயல்படும் வங்கிகள் முதல் அடுக்கு வங்கிகள் ஆகும். அருகருகே உள்ள மாவட்டங்களில் அக்கிளைகள் இருக்கவேண்டும். மற்றும் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளைகளில் மொத்த வைப்புகள் மற்றும் முன்தொகைகளில் 95 சதவீதமாவது வைப்புகள் மற்றும் முன்தொகைகள் ஒரு மாவட்டத்திற்கு உடையதாக இருக்கவேண்டும்.
- ரூபாய் 100 கோடிக்கும் குறைவாக வைப்புகள் உள்ள வங்கிகளின் கிளைகள் தொடக்கத்தில் ஒரு தனி மாவட்டத்திலும் ஆனால் காலப்போக்கில் மாவட்ட மறுசீரமைப்பின் காரணமாக பலமாவட்ட வங்கிகளாக உருவெடுத்தது.
மேலே குறிப்பிட்ட வைப்புகள் மற்றும் முன்தொகைகள் முந்தைய நிதி ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதிக்கானது என்று கருதப்படுகிறது.
4.2. வட்டிவிகிதம் இடர்வரவு விகிதம், குடியிருப்பின் அளவு, மற்ற காரணிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் தமது நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு வீட்டுவசதிக் கடன்களின் வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கலாம். 4.3. அபராத வட்டி விகிதம் விதித்தல் வங்கிகள் தத்தம் நிர்வாகக் குழுமத்தின் ஒப்புதலோடு ஒளிவுமறைவில்லாத தன்மையுடைய கொள்கை முறைமையை வகுத்திடலாம். கடனைத் திருப்பியளிக்கும் தவணைகளில் தாமதம், நிதிஅறிக்கைகள் அளிக்கத் தவறுதல், ஆகிய நேரங்களில் விதிக்கப்படும் அபராத வட்டிவிகிதம் குறித்த கொள்கையை வங்கிகள் வகுத்துக் கொள்ளலாம். ஒளிமறைவில்லாதத் தன்மை, நேர்மையான அணுகுமுறை, கடன் பராமரிப்பில் லாபம், வாடிக்கையாளரின் நியாயமான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய முக்கியமான அனைவரும் ஒப்புக்கொள்ள கூடிய கொள்கைகளைக் கொண்டவையாக வங்கியின் முறைமைகள் அமைந்திட வேண்டும். 4.4. அடமானம் /பிணையம்
- நகர கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடனுதவிக்கு பின்வரும் வகையில் அடமானம் பெறலாம்.
- சொத்தின் அடமானம்
- அரசின் உத்தரவாதம்
- அல்லது மேற்குறிப்பிட்ட இரண்டும் சேர்ந்து
- மேற்குறிப்பிட்டது வசதியாக இல்லாத நேரங்களில் அந்த மதிப்புடைய ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள், அரசு உத்தரவாதப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள்/கடன் பத்திரங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை வங்கிகள் அடமானமாக ஏற்றுக்கொள்ளலாம்.
4.5.கடனின் கால அளவு
- வீட்டுவசதிக் கடன்களின் கால அளவு “தள்ளுபடிச் சலுகை”, “திருப்பியளிப்பதில் விடுமுறை” என்று பல்வகை சலுகைக் கால அளவையும் சேர்த்து அதிகபட்சம் 15 ஆண்டுகளாக இருக்கலாம்.
- கடன் தள்ளுபடி அல்லது திருப்பியளிப்பதில் விடுமுறைச் சலுகை
- கடனாளியின் விருப்பம் போல்
- ட்டுமானப்பணி முடியும் கால அளவு வரையோ, கடனின் முதல் தவணை அளிக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாத காலம் இவற்றில் எது முன்கூட்டிய கால அளவோ அதுவரை இச்சலுகை அளிக்கப்படலாம்.
4.6. படிப்படியாக அமைக்கப்பட்ட கால அளவுத் தவணைகள்
- கடனாளியின் திருப்பித்தரும் தகுதியைக் கருத்தில் கொண்டு சாத்தியக் கூறுகளையும் ஆலோசித்து நியாயமான முறையில் கடன்தவணைகள் அமைக்கப்பட வேண்டும்.
- வீட்டுவசதிக் கடன் பெறுபவருக்கு கட்டுபடியாகும் வகையில் வங்கிகள் படிப்படியாகக் கணக்கிட்டு கடன் தவணைகளை அமைத்திட வேண்டும். அப்போது வருங்காலத்தில் கடனாளியின் வருவாய்த் தகுதியையும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். படிப்படியாகக் கணக்கிடும் முறையில், முதல் சில ஆண்டுத் தவணைகளில் குறைந்த அளவில் தொகையையும் பின்வரும் ஆண்டுகளில் எதிர்நோக்கும் வருவாய் அதிகரிப்போடு ஒத்திசையும் வண்ணம் அதிகத் தொகையுள்ள தவணைகளையும் அமைத்திடலாம்.
4.7. வீட்டுவசதிக் கடனுக்கான மொத்த வரையறை 4.7.1 தமது மொத்த வைப்புநிதிகளில் 15%ஐ நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கவும் மூலதனக் கடன் அளிக்கவும் பயன்படுத்தலாம். 4.7.2. தேசிய வீட்டுவசதி வங்கியிடமிருந்தோ அல்லது மற்ற உயர் நிதி நிறுவனங்களிடமிருந்தோ பெற்ற நிதியளவிற்கேற்ப கடன் உச்சவரம்பை உயர்த்தி கொண்டு வங்கிகள் வீட்டுவசதிக் கடன் அளிக்கலாம். 5. கூடுதல் துணை கடன்வசதிகள்
- கடனாளிகளின் தகுதியைக் கருத்தில் கொண்டு முன்னரே கடன் பெற்று கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் மற்றும் வீடுகளின் மாற்றியமைப்பு விரிவாக்கம், சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் கடன்வசதி அளிக்கலாம்.
- சில தனிநபர்கள் வேறுசில நிதி ஆதாரங்கள் மூலம் கடனுதவி பெற்று வீடு கட்டியிருந்தால்/வாங்கியிருந்தால் அதற்காகக் கூடுதல் கடனுதவி தேவைப்பட்டால் இணைப்பிணையமாக அந்த குடியிருப்பைக் கைக்கொண்டு அல்லது இரண்டாவது அடமானமாக அந்த குடியிருப்பைக் கைக்கொண்டு அல்லது வேறொரு அடமானப் பொருளை வைத்துக் கொண்டு வங்கிகள் கடனாளிகளின் நிலைக்கேற்ப திருப்பித் தரும் தகுதிக்கேற்ப கடன் தரலாம்.
- வங்கிகள் தேவைக்கேற்ற கடனுதவியாக கிராமப்புறம் மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் ரூ. 1 லட்சம் வரையும், நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சம் வரையும் மராமத்து விரிவாக்கம், சீரமைப்புப் பணிகளுக்காக, குடியிருப்புகளின் சொந்தக்காரர்களுக்கு அவற்றில் சொந்தக்காரரே வசித்தாலோ அல்லது வாடகைக்கு விட்டிருந்தாலோ ஏற்புடைய அடமானத்தின்பேரில் கடன் தரமுடியும். மராமத்து மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக ஆகும் செலவுகள், கூலி மற்றும் இதர செலவுகள் பற்றி தகுதியான பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் சான்றிதழ் பெற்று அவை சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்டு கடன்களை வழங்கலாம்.
- கடன் ஈட்டுக்காப்புறுதி, வட்டிவிகிதம், கடன் திருப்பியளிக்கும் காலம் இவை குறித்த கருத்துக்கள் மற்றும் கட்டளைகள், கூடுதல்/துணைக்கடன்கள் அளிக்கும்போதும் பின்பற்றப்படும்.
6. வீட்டுவசதி வாரியங்களுக்குக் கடன் 6.1 நகர கூட்டுறவு வங்கிகள் தத்தம் மாநிலங்களில் இயங்கும் வீட்டுவசதி வாரியங்களுக்கு கடன் வழங்கலாம். அப்போது அத்தகைய கடன்களுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் தம்மிச்சைப்படி விதித்திடலாம். 6.2 வீட்டுவசதி வாரியங்களுக்குக் கடன் வழங்கும்போது அவை பயன்பாட்டாளர்களிடமிருந்து கடன்வசூலிப்பதில், காட்டும் செயல் திறமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதோடு கூடவே அவர்கள் சரியான நேரத்தில் தவறாமல் கடனைத் திருப்பியளிப்பதை வீட்டுவசதி வாரியங்கள் உறுதி செய்திடல் வேண்டும் என்பதை வற்புறுத்திட வேண்டும். 7. கட்டிடக்கலைஞர்கள்/ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வசதிகள் 7.1 கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தங்களின் பணிக்காக பெரும்பணம் தேவைப்படுவதால் பயனாளிகளிடமிருந்தே ஓரளவு பணத்தை முன்பணமாகப் பெற்று தங்களின் பணியைத் தொடங்குவார்கள். ஆகவே அவர்களுக்கு வங்கியின் நிதியுதவி பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இத்தகையோருக்கு தொடக்க நிலைக் கூட்டுறவு வங்கிகள் கடனளிப்பது இரட்டிப்பு கடனுதவியாக அமைந்துவிடும். ஆகவே வங்கிகள் இத்தகையோருக்கு கடனளிப்பதை இயல்பாகத் தவிர்க்க வேண்டும். 7.2. சிற்சில சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள் முன்பணம் ஏதும் பெறாமல் தாமாகவே சில சிறிய கட்டிட வேலைகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கலாம். கட்டிடப் பொருட்களின் அடமானத்தின்பேரில், வங்கியின் துணை விதிகளுக்கு உட்பட்டும் அவ்வப்போது ரிசர்வ் வங்கி வழங்கும் கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஒப்பவும் இந்த கடனுதவியை அளிக்கலாம். 7.3. வங்கிகள் முதலில் கடன்விண்ணப்பங்களை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த விண்ணப்பதாரின் நோக்கத்தின் நேர்மை, தேவைப்படும் கடனுதவியின் அளவு, அவரின் கடன் பெறக் கூடிய தகுதி, திருப்பியளிக்கும் திறன் ஆகியவற்றை வங்கிகள் கவனிக்கவேண்டும். வழக்கமாகக் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது கடனாளியின் இருப்பு அறிக்கைகள், ஆய்வுகள், கணக்கிலிருந்து பணமெடுக்க வரையறுக்கப்பட்ட அதிகார முறைமைகள், இருப்பில் 40% முதல் 50% வரை பிணைய ஈட்டுத் தொகை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். கணக்கிலிருந்து பணமெடுக்கும் அதிகாரத்தை வரையறுக்க கட்டிடப்பணிக்கு உபயோகப் படுத்தப்பட்ட கட்டிடப்பொருட்கள் இருப்புக்கணக்கு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 7.4. நிலத்தை மதிப்பிடுதல்: கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு நிதி அளிக்கும்பொழுது சில வங்கிகள் பாதுகாப்பு நோக்கத்தில் நிலத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடத்தின் மதிப்பை மற்றும் செலவுகளை கழித்து நிலத்தை மதிப்பீடு செய்கின்றன. இது வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறைகளோடு ஒத்து போகவில்லை. இது தொடர்பாக, தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், நகர கூட்டுறவு வங்கிகள் நிதி அடிப்படையில் அல்லது நிதி அடிப்படையல்லாத வசதிகளை கட்டிடம் கட்டுபவர்கள்/ஒப்பந்ததாரர்கள் வீட்டுவசதி திட்டத்திற்காக நிலம் வாங்குவதற்கு அளிக்கக்கூடாது. மேலும் எங்கேனும் நிலம் இணைபிணையாக ஒப்புக்கொள்ளப்படும்பொழுது நிலத்தின் மதிப்பீடு நடப்பு சந்தை விலைக்கு நிகராக இருக்கவேண்டும். 7.5. எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் வங்கிகள் இணைப்பிணைப் பொருட்களைக் கைக்கொள்ளலாம். கட்டிடப்பணி வளர வளர, ஒப்பந்தக்காரர்கள் பணத்தைப்பெற்று அதைக் கடன் கணக்கை குறைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் வங்கிகள் இணைப்பிணையம் கிடைக்காதபோது மும்முனைப் பரிவர்த்தனை உடன்படிக்கைகளை கடனாளி மற்றும் நுகர்வோருடன் அமைத்துக் கொள்ளலாம். 7.6 இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவிகள் வீட்டுவசதிக் கடன்களாகக் கருதப்பட மாட்டாது. 8. முன்னுரிமைப் பிரிவில் வீட்டுவசதிக்கடன் 8.1. பின்வரும் வகையிலமைந்த வீட்டுவசதி கடன்கள் முன்னுரிமைப் பிரிவுக் கடன்களாகக் கருதப்படலாம்.
- ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடுகட்ட/வாங்க ஒரு தனிநபருக்கு ரூ.20 லட்சம் வரை கடன்கள் (வங்கிகள் தங்களது சொந்த ஊழியர்களுக்கு வழங்கும் கடன்கள் நீங்கலாக) இந்த இடத்தில் குடும்பம் என்பது அங்கத்தினரின் கணவன்/மனைவி அவர்களது குழந்தைகள் அந்த அங்கத்தினரை சார்ந்திருக்கும் அவர்களது பெற்றோர், சகோதர சகோதரிகள் ஆகியோர். ஆனால் சட்டத்தால் பிரிக்கப்பட்ட கணவன்/மனைவி இடம்பெற முடியாது.
- பழுதுபார்த்தல், பராமரிப்பு, விரிவாக்கம், மாற்றம் ஆகியவற்றிற்காக கிராமப்புற மற்றும் பகுதிநகர்ப்புறங்களில் வீட்டுவசதிக்கடன் ரூ.1 லடசம் வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2 லட்சம் வரையிலும் முன்னுரிமை கடனாகக் கருதப்படும்
- அரசு சார்ந்த முகமைகளுக்கு பின்வரும் திட்டங்களில் நிதியுதவி அளித்தல்
- ஆதிவாசியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பயன்படும் வகையில் மேற்கொள்ளப்படும் வீட்டுவசதிதிட்டங்கள் அல்லது குடிசை மற்றும் சேரிப்பகுதிகளை மாற்றியமைத்தல் அப்பகுதி வாழ் மக்களுக்கு புனரமைப்பு தரும் பணிகளில் ஈடுபடுதல் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்
- தேசிய வீட்டுவசதி வங்கியின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா முகமை குடிசை மற்றும் சேரிப்புறப்பகுதிப் புனரமைப்புப் பணிகளுக்கு வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவிக்கான மறுநிதியுதவி ஒரு வீடு கட்டுவதற்கு/மறுசீரமைப்பிற்கு ரூ.5 லட்சம் உச்சவரம்பு வரையுள்ள கடனுதவிகள் வழங்கப்படும்.
8.2. தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வாரியம் இவை வெளியிடும் பங்குப்பத்திரங்களில் ஏப்ரல் 1, 2007 அன்றோ அல்லது அதன் பின்னரோ செய்யப்படும் முதலீடுகள் முன்னுரிமைத்துறை கடனுதவியாக வகைப்படுத்தமுடியாது. 9. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 9.1 ஒரே வீட்டுக்கான பத்திரங்களின் பல்வேறு நகல்களைத் தயாரித்து அவற்றைக்காட்டி பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்ற மோசடி வழக்குகள் பல ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளன. அதிக அளவு கடனுதவி பெற வழிசெய்யும் வகையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் போலியான வருமானச்சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றின் அடிப்படையில் உயர் கடனுதவி பெற்றவர்களும் உண்டு. சொத்துமதிப்பினைக் கணக்கிடும்போதும் போலியாக அதிகத் தொகையைக் காட்டி, பிணை ஈட்டுத்தொகை கட்டுவதைத் தவிர்த்திடுவோரும் உண்டு. இத்தகு மோசடிகள் நடைபெற வங்கி அதிகாரிகளின் மெத்தனமான போக்கும் ஒரு காரணமாகும். வங்கி அதிகாரிகள் விதிமுறைகளை அனுசரித்து, சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை வங்கியின் வழக்கறிஞர்கள் அல்லது சட்ட ஆலோசர்களின் துணையோடு பகுத்தாய்ந்திடாமல் கடன் வழங்குதல் கூடாது. பல்வேறு ஆவணங்களை வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 9.2 அங்கீகாரமில்லாத முறைகேடான கட்டுமானப்பணிகள், பொது நிலத்தை அத்துமீறி அபகரித்து செயல்படுதல் ஆகியவற்றிற்கு கடன் தரும் பணம் பயன்படுத்தப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதன்பொருட்டு, இணைப்பு – 1ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகள் சரியாகப் பின்பற்றப் பட்டுள்ளனவா என்பதை வங்கிகள் கண்காணிக்க வேண்டும் 10. தேசிய கட்டுமானப் பணி நெறிமுறைகள் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் முழுமையான “தேசிய கட்டுமானப் பணிக்கான நெறிமுறை 2005” என்ற கொள்கையை அறிவித்தது. நாடெங்கிலும் உள்ள கட்டுமானப் பணிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்தது. பாதுகாப்பான சிறந்த கட்டுமானப் பணிகளை வளர்த்திடத் தேவையான முக்கிய அம்சங்கள் அனைத்தும் இதில் அளிக்கப்பட்டன. நிர்வாக அமைப்பு சார்ந்த விதிமுறைகள், ஒழுங்கான கட்டுமானப் பணி வளர்ச்சிக்கான விதிகள், பொதுவான கட்டிட அமைப்பு முறைமைகள், தீவிபத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டுமானப் பணிகளில் பயன்படும் மூலப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள், கட்டுமான வரைபட அமைப்புகள், கட்டுமானப் பணி (பாதுகாப்புடன் கூடிய) குழாய் பொருந்தும் அமைப்புகள், மராமத்து ஆகிய அனைத்து வகை சார்ந்த வழிகாட்டுதல்களும் இந்த நெறிமுறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கட்டிடங்களின் பாதுகாப்பு, குறிப்பாக இயற்கை சீற்றங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும். தமது கடன்கொள்கைகளில் வங்கியின் நிர்வாகக் குழுமம் இத்தகு நெறிமுறைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தேசிய கட்டுமானப் பணிசார்ந்த நெறிமுறை குறித்த விவரமான பல தகவல்களை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். (www.bis.org.in)
இணைப்பு – 1 அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடன் வேண்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான நடைமுறை தில்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் A. கட்டிடப்பணிக்கான வீட்டுவசதிக் கடன்
- வீட்டுமனை அல்லது நிலம் வைத்திருப்பவர், வீடு கட்டுவதற்காக நிதியுதவி வேண்டி வங்கியையோ இதர நிதி நிறுவனங்களையோ அணுகினால் மனை/நிலம் அவர் பெயரில் உள்ளதா? அந்த நபர் கட்டவிருக்கும் கட்டிடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்ட வரைப்படத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பெற்றுக் கொண்டு, பின்னர் கடன் வழங்கிட வேண்டும்.
- கடனுக்காக விண்ணப்பிக்கும் நபரிடமிருந்து வங்கி ஒரு உறுதிச் சான்றிதழை தேவைப்படும் படிவத்தில் பெற வேண்டும். கட்டிடத்தை அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைப்படத்தின்படி, விதிமீறல்கள் ஏதுமின்றி முடித்திட அந்த நபர் உறுதிமொழி அளித்திட வேண்டும். கட்டிடம் முடிந்ததும் 3 மாதங்களுக்குள் கட்டிடப்பணி முற்றுப்பெற்ற சான்றிதழை அளித்திட உறுதியேற்க வேண்டும். தவறினால் முழுக் கடன் தொகையை வட்டி மற்ற செலவினங்கள், வங்கிக் கட்டணங்களோடு சேர்த்து வங்கிக்கு திருப்பித் தந்திட உறுதி அளித்திட வேண்டும்
- வங்கியே கட்டிடக்கலைஞர் ஒருவரை நியமித்து, கட்டிட வரைபடத் திட்டத்தின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்த வேண்டும். அதே போன்று கட்டுமானப்பணி முற்றுப் பெற்றுவிட்டதை உறுதிப்படுத்தி அதற்கான சான்றிதழை உரிய அதிகாரியிடமிருந்து பெற்று அளித்துள்ளார் என்பதை அந்த வங்கியின் நியமிக்கப்பட்ட கட்டிடக்கலைஞர் உறுதிப்படுத்த வேண்டும்.
B. கட்டப்பட்ட கட்டிடங்களை நேரடியாக வாங்க வீட்டுவசதிக் கடன்
- கட்டப்பட்ட வீடு/குடியிருப்பு இவற்றிற்காகக் கடன் வாங்க ஒருவர் வங்கியை அணுகினால் அவருக்கு ஒரு நிபந்தனையை வங்கி விதிக்க வேண்டும். அதன்படி அவர் ஒரு உறுதிச் சான்றிதழையும் கட்டளைப்படிவத்தையும் பூர்த்தி செய்து தரவேண்டும். அதன்படி அவருடைய வீடு/குடியிருப்பு அங்கீகரிக்கப்பட்ட வரைப்படத் திட்டப்படியும் விதிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது என்றும் அவ்வாறு கட்டிமுடிக்கப்பட்டவற்றிற்கு முற்றுபெற்ற சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி மொழி கூறவேண்டும்.
- வீட்டுவசதிக் கடன் வழங்கப்படும் முன்னர், விண்ணப்பத்தாரரின் கட்டிடம் விதிமுறைகளின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை வங்கியின் கட்டிடக்கலைஞர் உறுதி செய்திட வேண்டும்.
C. அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் அங்கீகாரம் பெறும் வரை அதற்கான வளர்ச்சிநிதிக் கட்டணம் செலுத்தப்படும் வரை அத்தகைய குடியிருப்புகளுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கக் கூடாது. D. குடியிருப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை வணிகத்திற்காகப் பயன்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் அவ்வாறே பயன்படுத்த, உறுதி மொழியும் அளித்தால், அதற்காகக் கடன் விண்ணப்பித்தால், வங்கி அத்தகு நோக்கங்களுக்காக வீட்டுவசதிக் கடன் அளிக்கக் கூடாது. E. மேற்கண்ட வழிகாட்டிகள் விவசாய நிலத்தில் கட்டப்பட்ட பண்ணை வீடுகளுக்கு பொருந்தாது. ஏனெனில் இந்த விவசாய நிலங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மன்றங்களின் எல்லைக்கு வெளியே உள்ளதாலும், இந்த நிர்வாகங்கள் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் விவசாயிகளால் கட்டப்படும் பண்ணைவீடுகளுக்கு நிறைவு பெற்றமைக்கான சான்றிதழ்களும் அளிக்கப்படுவதில்லை. இத்தகைய அனைத்து விஷயங்களுக்கும் அந்தந்த உள்ளூர் விதிகள் பொருந்தும்.
பிற்சேர்க்கை வீட்டுவசதிக்கான நிதியுதவித் திட்டங்கள் குறித்த தொகுப்புச் சுற்றறிக்கை தொகுப்புச்சுற்றறிக்கையில் அடங்கியுள்ள சுற்றறிக்கையின் பட்டியல்
வ. எண் |
சுற்றறிக்கையின் எண்கள் |
தேதி |
விவரங்கள் |
-
|
UBD.PCB.Cir.No.30/ 09.09.001/2008-09 |
08.12.2008 |
வீட்டுவசதிக் கடன்கள் – டில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு (கல்யாண் சன்ஸ்தா நலச் சங்கம் இந்திய அரசை எதிர்த்து போட்ட வழக்கு) வழிக்காட்டுதல்களை செயல்படுத்துதல் |
-
|
UBD.UCB.Cir.No.42/ 09.09.001/2008-09 |
15.05.2008 |
தனிநபருக்கான வீட்டுவசதிகடன் வரம்பு திருத்தம் – ஆண்டுக்கொள்கை |
-
|
UBD.CO.BPD.No.33/ 13.05.000/2007-08 |
29.02.2008 |
கட்டிடக் கலைஞர்கள்/ஒப்பந்தக்காரர்களுக்கு கடன் வசதிகள் |
-
|
UBD.PCB.Cir.No.40/ 13.05.000/2006-07 |
04.05.2007 |
2007-08ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு – குடியிருப்புகளுக்கான வீட்டுவசதிக் கடன்கள் – இடர்வரவு மதிப்பீட்டு அளவையைக் குறைத்தல் |
-
|
UBD.PCB.Cir.No.20/ 09.09.001/2006-07 |
22.11.2006 |
வீட்டுவசதிக் கடன்கள் – டில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு (கல்யாண் சன்ஸ்தா நலச் சங்கம் இந்திய அரசை எதிர்த்து போட்ட வழக்கு) வழிக்காட்டுதல்களை செயல்படுத்துதல் |
-
|
UBD.PCB.Cir.No.58/ 09.09.01/2005-06 |
19.06.2006 |
தேசிய கட்டிட நெறிமுறைகளை பின்பற்றுதல் – கடன் வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய குறிப்புகள் |
-
|
UBD.PCB.Cir.No.55/ 09.11.600/2005-06 |
01.06.2006 |
2006-07 ஆம் ஆண்டிற்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு –வணிக நிலச் சொத்துக்களில் இடர்வரவு மதிப்பீட்டு அளவையைக் குறைத்தல் |
-
|
UBD.PCB.Cir.No.8/ 09.11.600/2005-06 |
09.08.2005 |
வீட்டுவசதிக் கடன்கள் மற்றும் வணிக நிலச் சொத்துக்களின் மீதான கடன்களின் நேர்முகப் படுநிலை மற்றும் போதுமான மூலதன நிறைவு ஆகியவை குறித்த விவேகமான நடைமுறைகள் |
-
|
UBD.BPD(PCB).Cir.No.29/09.09.01/2004-05 |
14.12.2004 |
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் – நகர்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுவசதிக் கடன்களுக்கான உச்சவரம்பை உயர்த்துதல் |
-
|
UBD.PCB.Cir.No.30/ 09.22.01/2003-04 |
16.01.2004 |
போலி சொத்துரிமை ஆவணங்கள் மற்றும் போலி சம்பளச் சான்றிதழ்களை அளித்து வீட்டுவசதிக் கடன்ககளை பெறுவதில் மோசடி |
-
|
UBD.BPD.No.45/ 09.09.01/2002-03 |
14.05.2003 |
2003-04 ஆம் ஆண்டிற்கான கடன்கொள்கை - முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் |
-
|
UBD.BPD.PCB.No.31/09.09.01/2002-03 |
30.12.2002 |
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் |
-
|
UBD.No.Plan.Cir.RCS.2 /09.22.01/1998-99 |
15.03.1999 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.No.Plan./RO.49 /09.22.01/1997-98 |
17.06.1998 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.No.Plan.Cir.RCS.9 /09.22.01/1995-96 |
01.09.1995 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.No.Plan.Cir.RCS.8 /09.22.01/1994-95 |
11.01.1995 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.No.P&O.10/UB-31/ 1991-92 |
26.03.1992 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.No.P&O.108/UB-31/ 1988-89 |
05.04.1989 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி – தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் |
-
|
UBD.DC1/R.1-1987-88 |
03.07.1987 |
கடன்களின் மீது உச்சவரம்பு |
-
|
UBD.No.(DC)2/R.1- 1987-88 |
03.07.1997 |
கடன்களின் மீது உச்சவரம்பு |
-
|
DBOD.UBD.P&O.161/UB 31-1983-84 |
02.09.1983 |
நகர்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் வீட்டுவசதித்திட்டங்களுக்கான நிதியுதவி |
-
|
DBOD.UBD.P&O.229/UB 31-1982-83 |
05.11.1982 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் நிதியுதவி |
-
|
DBOD.UBD.P&O.230/UB 31-1982-83 |
05.11.1982 |
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி |
-
|
ACD.Plan.(SZ)401/PR.338 -1981-82 |
17.08.1981 |
வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி – |
-
|
ACD.Plan.1502/PR.338 1976-77 |
11.10.1976 |
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி |
-
|
ACD.Plan. (781)/PR.338 1976-77 |
24.08.1976 |
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டுவசதித்திட்டங்களுக்கு கூட்டுறவு வங்கியின் நிதியுதவி |
தொகுப்புச் சுற்றறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட வீட்டுவசதிக்கான நிதியுதவி குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்புடைய இதர சுற்றறிக்கைகளின் பட்டியல்
வ. எண் |
சுற்றறிக்கையின் எண்கள் |
தேதி |
பொருள் |
1 |
UBD.CO.L.S.Cir.No.66/07.01.000/2008-09 |
06.05.2009 |
2 009-10 ஆண்டிற்கான ஆண்டு கொள்கை அறிவிப்பு - செயலாக்க பரப்பெல்லையை விரிவுபடுத்துதல் – அதிகாரமளித்தல் |
2 |
UBD.UCB.Cir.No.11/ 09.09.01/2007-08 |
30.08.2007 |
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் |
3 |
UBD.PCB.BPD.1/ 09.09.001/2006-07 |
11.07.2006 |
முன்னுரிமைப்பிரிவுக்கான கடன்கள் – NHB/HUDCO வெளியிடும் சிறப்பு பத்திரங்களில் முதலீடுகள் |
4 |
UBD.PCB.Cir.No.16/ 09.09.001/2006-07 |
17.10.2006 |
முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் - வீட்டுவசதிக் கடன்கள் –உச்சவரம்பை உயர்த்துதல் |
5 |
UBD.DS.Cir.No.44/ 13.05.000/2004-05 |
15.04.2005 |
கடனில் உச்ச வரம்பு – கடன் படுநிலையின் வரம்பு |
6. |
UBD.DS.Cir.No.31/ 13.05.000/1999-2000 |
01.04.2000 |
கடனில் உச்ச வரம்பு – கடன் படுநிலையின் வரம்பு |
7. |
UBD.Plan.PCB.7 /09.09.01/1999-2000 |
22.12.1999 |
முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் - வீட்டுவசதிக் கடன்கள் |
8. |
UBD.Plan.PCB.24 /09.09.01/1997-1998 |
01.12.1997 |
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் |
9. |
UBD.DS.PCB.Cir.No.39/ 13.05.00/1995-96 |
16.01.1996 |
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் கடனில் உச்ச வரம்பு |
10 |
UBD.Plan.PCB.6 /09.09.01/1994-1995 |
22.07.1994 |
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் |
11 |
UBD.Plan.68 /09.09.01/1993-1994 |
09.05.1994 |
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் முன்னுரிமைப்பிரிவுக் கடன்கள் |
12 |
UBD.DC.536/R.1 1984-85 |
16.10.1984 |
கடன்களின் மீது உச்சவரம்பு |
|