இந்திய ரிசர்வ் வங்கி மத்திய மன்றக்குழுவிற்கு Ms. அஞ்ஜூலி சிப் டுக்கல், இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
செப்டம்பர் 10, 2015 இந்திய ரிசர்வ் வங்கி மத்திய மன்றக்குழுவிற்கு புதுதில்லி, நிதியமைச்சகத்தின், நிதியியல் சேவைகள் துறையின் செயலாளர், Ms. அஞ்ஜூலி சிப் டுக்கல், அவர்களை டாக்டர் ஹஸ்முக் அதியா அவர்களின் இடத்தில் (பதிலாக), இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றக்குழு இயக்குநர்களில் ஒருவராக மத்திய அரசு நியமித்துள்ளது. Ms. அஞ்ஜூலி சிப் டுக்கல் அவர்களின் நியமனம் செப்டம்பர் 03, 2015-லிருந்து அதற்கான மறு ஆணைகள் வரும்வரை அமலில் இருக்கும். அல்பனா கில்லாவாவா PRESS RELEASE: 2015-2016 / 635 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: