நகர் சஹ்காரி வங்கி லிட்., இட்டாவாஹ் - அபராதம் - ஆர்பிஐ - Reserve Bank of India
நகர் சஹ்காரி வங்கி லிட்., இட்டாவாஹ் - அபராதம்
ஆகஸ்டு 01, 2017 நகர் சஹ்காரி வங்கி லிட்., இட்டாவாஹ் - அபராதம் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நகர் சஹ்காரி வங்கி லிட்., இட்டாவாஹ் மீது ரூ. 20,000 (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) அபராதம் விதிக்கிறது. இதனைப் பின்வரும் காரணத்திற்காக விதிக்கிறது. KYC / AML நடவடிக்கைகள் மற்றும் வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், பிரிவு 26A மற்றும் RBI அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக மேற்படி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் கோரி அறிவிப்பினை அனுப்பியது. அதற்கு வங்கி, எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. இது குறித்த உண்மைகளையும், வங்கியின் பதிலையும் கருத்தில் கொண்டதில், வங்கியின் அத்துமீறல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2017-18/312 |