வங்கிக் கிளைகள் நாணயங்களை வாங்க மறுப்பது - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிக் கிளைகள் நாணயங்களை வாங்க மறுப்பது
RBI/2004-05/348
DCM (RMMT) No.1403/11.37.01/2004-05
ஜனவரி 19, 2005
தலைவர்/நிர்வாக இயக்குநர்
பொது/தனியார் துறை வங்கிகள்
அன்புடையீர்,
வங்கிக் கிளைகள் நாணயங்களை வாங்க மறுப்பது
2003 அக்டோபர் 9, 2004 எப்ரல் 5 தேதியிட்ட DCM(RMMT) No.404 & 1181/11.37.01/2003-04 என்ற இரு சுற்றறிக்கைகளிலும் அனைத்து வங்கிக் கிளைகளும் பொது மக்களிடமிருந்து நாணயங்களை எந்த விதக் கட்டுப்பாடுமின்றி வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அரசும் ரிசர்வ் வங்கியும் மக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளில் கடும் விமர்சனம் செய்கிறார்கள். அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய இது மாதிரி நிகழ்வுகள் மீண்டும நடக்காமல் இருக்க, அடிக்கடி உங்கள் பணியாளர்களைக் கூப்பிட்டு பொதுச் சேவையைப் பற்றியும் மக்கள் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்து, பொதுமக்களிடமிருந்து இது போன்ற புகார்கள் வரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்ட்டும். வட்டார பகுதி மேளாளர்கள், தங்கள் கீழ் உள்ள கிளைகள், மக்களிடமிருந்து நாணயங்களை ஏற்றுக் கொள்ளுதல் சம்பந்தமாகக் கொடுக்கும் செயல் அறிக்கையின் உண்மைத் தன்மையை கண்டறிய கிளைக்கு முன்னறிவிப்பின்றிச் சென்று கண்காணிக்க வேண்டும். 2004 ஏப்ரல் 5 சுற்றறிக்கை பாரா 4இல் கூறியுள்ள அறிவுறையை அப்படியே பின்பற்ற வேண்டும்.
கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்க
அன்புடன்
U.S. பாலிவால்
தலைமைப் பொதுமேலாளர்