பணமாற்று வசதிகளில் நீர்மத்தன்மை வசதிக்கான ஏற்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
பணமாற்று வசதிகளில் நீர்மத்தன்மை வசதிக்கான ஏற்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது
நவம்பர் 26, 2016 பணமாற்று வசதிகளில் நீர்மத்தன்மை வசதிக்கான ஏற்பாடுகளை ரூ. 500 மற்றும் ரூ. 1000 சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து (குறிப்பிட்ட நோட்டுகள் என்றே அவை இனி சுட்டிக்காட்டப்படும்) விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, நவம்பர் 09, 2016 முதல் வங்கிகளில் டெபாசிட்டுகள் பெருமளவு (கடன் வசதியோடு ஒப்பிடுகையில்) அதிகரித்து வங்கி முறைமையில் நீர்மத்தன்மை மிகவும் அதிகமாகிவிட்டது. இது அடுத்த இருவாரங்களில் இன்னும் அதிகரிக்க்க் கூடுமேன்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பொருட்டு, இந்த உபரியான பணவரவை சமன் செய்யும் வகையில், தற்காலிகமாக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க இருப்பின் கூடுதல் அளவு விகிதத்தைப் (CRR) பின்வருமாறு அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டு உத்தரவுகள் சுற்றறிக்கையாகத் தனியே வெளியிடப்படுகிறது. (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1335 |