தமிழ்நாடு, பூர்வஜா ஃபின்கார்ப் நிறுவனம் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தமிழ்நாடு, பூர்வஜா ஃபின்கார்ப் நிறுவனம் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கியின், ‘முதன்மை வழிமுறைகள் - இந்திய ரிசர்வ் வங்கி (வங்கி சாரா நிதி நிறுவனம்- அளவு அடிப்படையிலான ஒழுங்குமுறை) வழிமுறைகள், 2023’ விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மார்ச் 27 , 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், பூர்வஜா நிதி நிறுவனம் (நிறுவனம்) மீது ₹50,000/- (ரூபாய் ஐம்பாதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 58 G(1)(b) உடன் இணைந்த பிரிவு 58B (5) (aa) இன் விதிகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது. துணைக் கடன்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்கூட்டிய பணம் வழங்கியது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு நிறுவனம் இணங்கவில்லை என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக நிறுவனம் மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு நிறுவனத்தின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது: (புனீத் பஞ்சோலி) பத்திரிகை வெளியீடு: 2024-2025/2513 |