தமிழ்நாடு, திருப்பூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
தமிழ்நாடு, திருப்பூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கியின், ‘'வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள் – நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்', மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்’ விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில அறிவுறுத்தல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிப்ரவரி 07, 2025 தேதியிட்ட உத்தரவின் மூலம், திருப்பூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி (வங்கி) மீது ₹1.50 லட்சம் (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56-இன் கீழ் விதிக்கப்பட்டது. மார்ச் 31, 2023 தேதியில் வங்கியின் நிதி நிலைப்பாட்டை வைத்து இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது: வங்கி,
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் வேறு எந்த நடவடிக்கை எடுத்தால் அது பாரபட்சம் இல்லாமல் இருக்கும். (புனீத் பஞ்சோலி) பத்திரிகை வெளியீடு: 2024-2025/2153 |