இந்திய ரிசர்வ் வங்கி சிறப்புமுறை மின்னணு தொகைமாற்றுமுறை அறிமுகம் - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி சிறப்புமுறை மின்னணு தொகைமாற்றுமுறை அறிமுகம்
இந்திய ரிசர்வ் வங்கி சிறப்புமுறை மின்னணு
தொகைமாற்றுமுறை அறிமுகம்
மார்ச் 31, 2003
இந்திய ரிசர்வ் வங்கி ஏனைய வங்கிகளுடன் இணைந்து சிறப்புமுறை மின்னணு தொகைமாற்று செயல்திட்டம் (SEFT) ஒன்றினை புதுமுயற்சியாக மேற்கொண்டுள்ளது. இச் செயல்திட்டத்தின் மூலம் நாடெங்கிலுமுள்ள பல மையங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளுக்கு பாதுகாப்பாக, நம்பிக்கையுடன் அத்துடன் விரைவாக மின்னணு முறையில் தொகையை மாற்றித்தர இயலும். மும்பையில் ஏற்பட இருக்கும் வங்கிகளுக்கு இடையேயான தொகைகளை மாற்று ஒத்திசைவு உறிதிப்பாட்டின் அடிப்படையில் இந்தச் செயல் திட்டம் ஏப்பிரல் 1, 2003 முதல் அறிமுகப்படுத்தப்படும்.
இச் செயல் திட்டத்தின் சிறப்புக் கூறுங்கள்:
·
இச்செயல் திட்டத்திற்குள் பங்குபெறும் வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளில் அதேதினத்தில் தொகைகள் மாற்றித் தருவதற்கான ஏற்பாடுகளை இச்செயல் திட்டம் வடிவமைத்துள்ளது.
·
·
வலை அமைப்பினுள் இந்திய ரிசர்வ் வங்கிக் கிளைகளைத் தன்னகத்தே கொண்டது. இச்செயல் திட்டம் அதனால் சிறப்புமுறை மின்னணு தொகைமாற்று செயல் திட்டத்தினுள் உள்ள (சிபிதொமா) வங்கிக் கிளைகளுக்கு மின்னணுமுறையில் தகவல் அனுப்பப்படுகிறது.
·
·
வங்கி கிளைககளுக்கிடையேயான சிபிதொமா திட்டத்தின் கீழ் உறுதிப்பாடு மும்பையில் செய்யப்படுகிறது. அது தொடர்பான செயற்பாங்கு மும்மைநரிமன் முனையிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தேசிய மாற்றுமையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
·
·
வாரநாட்களில் அங்குமூன்று சிபிதொமா ஓத்திசைவு (அ) உறிதிப்பாட்டு சுழற்சி நிகழ்வுகள் நடைபெறுகின்றன (12.00 மதியம், 2.00, 4.00 மாலை) அத்துடந்) இரண்டு ஒத்திசைவு (அ) உறிதிப்பாட்டு நிகழ்வுகள் சனிக்கிழமை (12.00 மதியம், 2.00 மாலை) அன்று நடைபெறுகின்றன.
·
·
சிபிதொமா விற்கு வரும் வரவு தொடர்பான கோரிக்கைகள் அநனால் பயனடைபவரின் கணக்கில் தாமதமானாலும் சுழற்சி நிகழ்வில் அடுத்த உறுதிப்பாட்டு நிகழ்விற்கு முன்னதாகவே போய்ச் சேரும்.
·
·
பயனடைபவரின் கணக்கிற்கு அனுப்பமுடியாத எந்த வரவுத்தொகையும் அறுத்து வரும் உறுதிப்பாட்டு நிகழ்வின்போது திருப்பி அனுப்பப்படும். அவ்வாரில்லையெனில் அத்தொகை சேரவேண்டிய கணக்கிற்குச் சென்றுவிட்டது எனக் கருதப்படும்.
·
·
சிபிதொமா செயல்திட்டத்தின் கீழ் ஏற்படும் ஒத்திசைவு இப்போதுள்ள EFT திட்டத்திலிருந்து வேற்பட்டது. சிபிதொமா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் அச்செயல் திட்டம் தொடர்ந்து செயல்படும்.
·
·
சிபிதொமா செயல்திட்டத்தின் கீழ் 500 நகரங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன. கிளைகளின் எண்ணிக்கை 2500க்கும் கூடுதலாதும்.
·
·
பங்கு மாற்றுக் களத்தில் முன்மொழியப்பட்ட T+2 அடிப்படையில், பங்குரிமைச் சான்றிதழின் உருளும் ஒப்பிசைவு போல இச்செயல் திட்டம் பணவரவையும் பணப்பற்றையும் சரியான காலத்தில் ஒப்பிசைவு பெற வசதி செய்ய்ம்.
·
வங்கிகளின் கிளைகள் குறித்த பட்டியல் உள்பட கூடுதல் தகவல்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இணைய தளம் www.rbi.org.in இல் பெறலாம்.
அல்பனா கில்லாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2002-2003/1018