இந்திய ரிசர்வ் வங்கி பூடானிலுள்ள ராயல் மானிடரி அதாரிடியுடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி பூடானிலுள்ள ராயல் மானிடரி அதாரிடியுடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது
ஏப்ரல் 18, 2017 இந்திய ரிசர்வ் வங்கி பூடானிலுள்ள ராயல் மானிடரி அதாரிடியுடன், இந்திய ரிசர்வ் வங்கி, “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற” த்திற்காக பூடானிலுள்ள ராயல் மானிடரி அதாரிடியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. ராயல் மானிடரி அதாரிடியின் துணை ஆளுநர் திரு. பாஜோ டோர்ஜீ அவர்களும், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக, வங்கியின் துணை ஆளுநர் திரு. S.S. முந்த்ரா அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேற்பார்வைத் தகவலைப் பகிர்ந்திடவும், அதிக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சில நாடுகளின் மேற்பார்வைத் துறையினரிடையே, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மற்றும் மேற்பார்வை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மேற்பார்வைத் துறையில் ஒத்துழைப்புக்கான கடிதம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு மேற்பார்வை ஒத்துழைப்பிற்கான கடிதம் மற்றும் ஒரு ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவற்றை செய்துள்ளது. (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2808 |