₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “S” எழுத்துடன் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “S” எழுத்துடன் வெளியீடு
ஜூன் 15, 2016 ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை 2005 ஆம் ஆண்டு வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் எண்களுக்கான இரு பகுதிகளிலும் “S” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் ஆண்டு “2016“ என்று அச்சிடப்பட்ட ₹ 20 மதிப்பிலக்கத்தில் விரைவில் வெளியிடுகிறது. தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, ₹ 20 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு - 2015-2016/2914 |