RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78517680

இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் பாங்க் நிறுவனங்களுக்கு பண அபராதம் விதிக்கிறது

நவம்பர் 20, 2019

இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் பாங்க் நிறுவனங்களுக்கு
பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 18, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி, கணக்கு செலுத்துவோர் காசோலைகளை சேகரித்தல், மோசடிகளைப் புகாரளித்தல், வங்கியில் சேமிப்பு கணக்கைத் துவக்குதல் (எஸ்பி), வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதற்கான பதிவுகளை பாதுகாத்தல் மற்றும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) / பணமோசடி தடுப்பு (ஏ.எம்.எல்) விதிமுறைகளை பின்பற்றாததால் பாங்க் ஆப் பரோடாவுக்கும் ; நவம்பர் 18, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி, (எஸ்.பி.) சேமிப்பு கணக்கைத் துவக்குதல் மற்றும் கே.ஒய்.சி / ஏ.எம்.எல் ஆகியவற்றிற்கான விதிமுறைகளை பின்பற்றாததற்காக இந்திய வங்கிக்கும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி பண அபராதம் விதித்துள்ளது:

வரிசைஎண் வங்கியின்பெயர் அபராதத் தொகை
(ரூ. கோடியில்)
1. பாங்க் ஆப் பரோடா 2.50
2. இந்தியன் பாங்க் 0.75

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 51 (1) விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கி வழங்கிய மேற்கண்ட விதிமுறைகளை வங்கிகள் பின்பற்றத் தவறியதனால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மையை பாதிக்கும் நோக்கில் அல்ல.

பின்னணி

வங்கிகளால் பராமரிக்கப்படும் ஒரு கூட்டுறவு சங்கத்தின் பல்வேறு கணக்குகள் மூலம் பல்வேறு அரசு நிறுவனங்கள்/துறைகளின் கணக்குகளில் இருந்து முறைகேடு மற்றும் மோசடி மூலம் நிதி திரும்பப் பெறுவது குறித்த சில புகார்களின் அடிப்படையில் ஆர்பிஐ மேற்கொண்ட ஆய்வில், கணக்கு செலுத்துவோர் காசோலைகளை சேகரித்தல், மோசடிகளைப் புகாரளித்தல், சேமிப்பு கணக்குகளைத் துவக்குதல், வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பதற்கான பதிவுகளைப் பாதுகாத்தல் மற்றும் கே.ஒய்.சி / ஏ.எம்.எல் விதிமுறைகள் குறித்து ஆர்பிஐ வழங்கிய சில விதிமுறைகளை மேற்கண்ட வங்கிகள் பின்பற்றவில்லை என கண்டறியப்பட்டது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மேற்கண்ட வழிமுறைகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் மற்றும் தனிப்பட்ட விசாரணைகளின் போது செய்யப்பட்ட சமர்ப்பிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைப்பிடிக்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள், ஒவ்வொரு வங்கியிலும் எந்த அளவு பின்பற்றவில்லையோ அந்த அளவிற்கு ஏற்ப பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1233

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?