RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78511305

இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேஷன் பாங்க் மீது பண அபராதம் விதிக்கிறது

நவம்பர் 29, 2019

இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேஷன் பாங்க் மீது பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 29, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம், “வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் முன்பணம் தொடர்பாக வழி வகை செய்தல் பற்றிய விவேகமான விதிமுறைகள் - என்பிஏ கணக்குகளில் வேறுபாடு”, “வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் முன்பணம் தொடர்பாக வழிவகை செய்தல் பற்றிய விவேகமான விதிமுறைகள்”, “வங்கிகளின் முதலீட்டு இலாகாவின் வகைப்பாடு, மதிப்பீடு மற்றும் செயல்பாட்டிற்கான விவேகமான விதிமுறைகள் ”,“ பொருளாதாரத்தில் நெருக்கடியுள்ள சொத்துக்களை புத்துயிர்ப்பதற்கான கட்டமைப்பு - திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு ”,“ நிதிகளின் இறுதிப் பயன்பாடு - கண்காணித்தல் ”,“ வங்கிகளால் பில்களை தள்ளுபடி செய்தல் / மறு கணக்கீடு செய்தல் ”மற்றும்“ இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுத்த FI களின் மோசடிகளின் வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல்) உத்தரவுகள் 2016” ஆகியவைத் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சில விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக கார்ப்பரேஷன் பாங்க் (தி பாங்க்) மீது ரூ. 1.50 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவுகள் 46 (4) (i) மற்றும் 51 (1) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

பின்னணி

மார்ச் 31, 2017 நிலவரப்படி வங்கியின் நிதிநிலைத் தொடர்பான சட்டப்பூர்வமான ஆய்வு மற்றும் அது தொடர்பான இடர் மதிப்பீட்டு அறிக்கை (ஆர்ஏஆர்), ஆர்பிஐ வழங்கிய மேற்கூறிய வழிமுறைகளை வங்கி பின்பற்றவில்லை என்பதைத் தெளிவுப்படுத்தியது. அதற்கேற்ப, உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. அந்த அறிவிப்பிற்கான வங்கியின் பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் கூடுதல் சமர்ப்பிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ஆர்பிஐ இன் உத்தரவுகளைப் பின்பற்றாததற்காகப் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1310

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?