RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78521723

புனேவின் ஜனதா சகாரி பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

அக்டோபர் 29, 2019

புனேவின் ஜனதா சகாரி பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), அக்டோபர் 16, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி புனேயின் ஜனதா சஹாகரி பாங்க் லிமிடெட்(தி பாங்க்) நிறுவனத்திற்கு, ஆர்பிஐ வெளியிட்டுள்ள வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி) விதிமுறைகள், முன்பணங்கள் மற்றும் வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகளின் மேலாண்மை தொடர்பான உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் இன் பிரிவு 47 A(1)(c) ஆகியவற்றுடன் இணைந்த பிரிவுகள் 46 (4)(i) மற்றும் 56 விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வழிமுறைகளை வங்கி கடைபிடிக்காததால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கமாக இல்லை.

பின்னணி

ஆர்பிஐ யால் மார்ச் 31, 2018 நிலவரப்படி நடத்தப்பட்ட வங்கியின் நிதிநிலைத் தொடர்பான சட்டரீதியான ஆய்வில், ஐ.ஆர்.ஏ.சி விதிமுறைகள் முன்பணங்களை நிர்வகித்தல், வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள் மற்றும் ஏடிஎம்-கம் டெபிட் கார்டுகளை வழங்குதல் குறித்த ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றாதது தெரிய வந்தது. மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக ஏன் பண அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், ஐ.ஆர்.ஏ.சி விதிமுறைகள், முன்பணங்கள் மற்றும் வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது .

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1049

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?