RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78521351

ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு -க்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

ஆகஸ்ட் 02, 2019

ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு -க்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 25, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு (தி பாங்க்) மீது ‘மூன்றாம் தரப்பு கணக்கு செலுத்துவோர் காசோலைகளை சேகரித்தல்’ குறித்து ஆர்பிஐ வழங்கிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) மற்றும் 56 ஆகிய பிரிவுகளுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்பிஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை வங்கி கடைப்பிடிக்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

பின்னணி

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பெற்ற புகார்களின் அடிப்படையில், ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு (தி பாங்க்) இன் புத்தகங்கள் மற்றும் கணக்குகளின் ஆய்வை , ஆர்பிஐ நடத்தியபோது, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக ரூ. 50,000/- ஐத் மீறிய தொகைக்கு கடன் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஆதரவாக வரையப்பட்ட மூன்றாம் தரப்பு கணக்கு செலுத்துவோர் காசோலைகளை வங்கி சேகரிப்பது கண்டறியப்பட்டது. ஆர்பிஐ வழங்கிய மேற்கூறிய உத்தரவுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று வங்கிக்கு காரண விளக்க அறிவிப்பு அனுப்பப்பட்டது.

வங்கியின் பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பின்னர் வங்கி அளித்த கூடுதல் சமர்ப்பிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ஆர்பிஐ உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது மற்றும் பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/335

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?