RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78440847

இந்திய ரிசர்வ் வங்கி வரிப்பணத்தைவங்கி வேலை நேரத்திற்குப் பிறகும் மார்ச் 31 அன்று பெற்றுக் கொள்ளும்

பத்திரிகை வெளியீட்டுப் பிரிவு                                             இந்திய ரிசர்வ் வங்கி

மைய அலுவலதம் மும்பை

த.பெ. எண்.406

மும்பை-400 001                                                                                மார்ச் 29, 2007

தொலைபேசி எண்: 22660502

நகலனுப்பி      எண்: 22660358

                                      22703279

 

இந்திய ரிசர்வ் வங்கி வரிப்பணத்தை

வங்கி வேலை நேரத்திற்குப் பிறகும்

மார்ச் 31 அன்று பெற்றுக் கொள்ளும்

                 

பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி தனது மும்பை மற்றும் நவி மும்பை அலுவலக முகப்புகளில் மார்ச் 31, 2007 அன்று மாலை 4 மணி வரை வரி செலுத்த விரும்புவோர் செலுத்தும் பணத்தை ஏற்றுக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  காசோலை அல்லது வேறு உபகரணங்கள் மூலம் அரசுக்கு வரி செலுத்துவோர், 5 மணி வரை மார்ச் 31, 2007 அன்று ரிசர்வ் வங்கி பெற்றுக் கொள்ளும்.

                  முகவர் வங்கிகள் முறையே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் சார்பு வங்கிகள், நியமிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் வங்கி அலுவலக வேலை நேரத்திற்குப் பின்னரும் மார்ச் 31, 2007 அன்று வரிப்பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

                  மார்ச் 31, 2007 தேதியன்று முடியும் நிதியாண்டிற்கான இந்த வசதிகளை, வரி செலுத்துவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்கிறது.

அஜித் பிரசாத்

மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2006-2007/1316

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?