₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது
அறிவிப்பு எண் 129 நவம்பர் 13, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் ₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM (Plg) 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். மறு ஆய்வின்பேரில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்புகளில் கீழ்க்குறிப்பிட்டவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் தேதி ஜனவரி 15, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3. முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தனித்தனியே சிறப்பு வரிசைகளை வங்கிகள் ஏற்பாடு செய்திடவேண்டும். அதேபோல், வங்கிகளில் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குத் தனிவரிசை மற்றும் அவற்றை கணக்கில் டெபாசிட் செய்ய வருபவர்களுக்குத் தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 4. “வங்கி வசதி ஏற்பாட்டாளர்கள்” (வங்கித் தொடர்பாளர்கள்) வாடிக்கையாளர்களுக்கு கணக்கிலிருந்து பணம் கொடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2,500 வரை உயர்த்தப்பட வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். 5. மேற்குறிப்பிட்ட திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. 6. இதைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும். இங்ஙனம் (P. விஜயகுமார்) |