RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78499671

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது

அறிவிப்பு எண் 129
Ref. No. DCM (Plg) 1273/10.27.00/2016-17

நவம்பர் 13, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது

மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM (Plg) 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். மறு ஆய்வின்பேரில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்புகளில் கீழ்க்குறிப்பிட்டவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  1. முகப்புகளில் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ள மதிப்பிற்கான வரம்பு ரூ. 4,000-லிருந்து ரூ. 4,500 ஆக உயர்த்தப்பட்டது.

  2. கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்ட ஏடிஎம்-களிலிருந்து தினசரி எடுப்பதற்கான பணத்தின் மதிப்பு ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர ஏடிஎம்-கள் தொடர்ந்து கணிப்புக் கூறு மாற்றப்படும் வரை ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து வழங்கும்.

  3. தினசரி பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.10,000 என்பது விலக்கிக் கொள்ளப்பட்டு வாரத்திற்கு ஒட்டுமொத்தமாக இருந்த ரூ.20,000 வரம்பு ரூ.24,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் தேதி ஜனவரி 15, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3. முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தனித்தனியே சிறப்பு வரிசைகளை வங்கிகள் ஏற்பாடு செய்திடவேண்டும். அதேபோல், வங்கிகளில் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குத் தனிவரிசை மற்றும் அவற்றை கணக்கில் டெபாசிட் செய்ய வருபவர்களுக்குத் தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

4. “வங்கி வசதி ஏற்பாட்டாளர்கள்” (வங்கித் தொடர்பாளர்கள்) வாடிக்கையாளர்களுக்கு கணக்கிலிருந்து பணம் கொடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2,500 வரை உயர்த்தப்பட வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

5. மேற்குறிப்பிட்ட திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

6. இதைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.

இங்ஙனம்

(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?