2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - முதிர்வு நிலைக்கு முன்னரே முதலீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் – விளக்கங்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - முதிர்வு நிலைக்கு முன்னரே முதலீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் – விளக்கங்கள்
RBI / 2006-07 / 211
DGBA.CDD.No.H.9741/15.15.001/2006-07 டிசம்பர் 18, 2006
பொது மேலாளர்
அரசுக்கணக்குத் துறை – தலைமை அலுவலகம்
பாரத, இந்தூர், பாட்டியாலா, பிக்கனர் & ஜெய்பூர்
செளராஷ்ட்ரா, திருவாங்கூர், ஹைதராபாத், மைசூர்,
ஸ்டேட் வங்கிகள்
அலாகபாத், பரோடா, மஹாராஸ்ட்ரா, கனரா, சென்ட்ரல்,
கார்ப்பரேஷ்ன், தேனா, இந்தியன், இந்தியன் ஓவர்சீஸ்,
பஞ்சாப் நேஷ்னல், சிண்டிகேட், யூகோ, யூனியன்,
யூனைடட், விஜயா, ஐசிஐசிஐ வங்கிகள், பாங் ஆப் இந்தியா.
அன்புடையீர்,
2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் - முதிர்வு நிலைக்கு முன்னரே முதலீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுதல் – விளக்கங்கள்
2004 மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதிர்வு நிலைக்கு முன்னரே முதலீட்டுப்பணத்தை வைப்புதாரர்களுக்கு வழங்குதலில், இடைப்பட்ட காலத்திற்கான வட்டி வழங்குவது சம்பந்தமாக அநேக வினாக்கள் வந்த வண்ணமிருக்கின்றன். மத்திய அரசின் நிதி அமைச்சகத்தை இது சம்பந்தமாகத் தொடர்பு கொண்டதில், அவர்கள் தங்களது 2006 மே 11 தேதியிட்ட கடித எண் F.15/8/2005/NS-II இல், முதிர்வு நிலைக்கு முன்னர் குதலீட்டுப்பணத்தை வாடிக்கையாளர் கேட்கும் பொழுது, திட்ட விதி 9(i)(a)(b) இன் கீழ் அதற்கான் அபராதத் தொகையைக் கழித்துக் கொண்டு தான் வழங்க வேண்டும் என்று கூறுகின்றன்ர். எனவே முதலீட்டுத் தொகையிலிருந்து அபராதத் தொகையைக் கழித்துத் தான், முதிர்வு நிலைக்கு முன்னர் வழங்கப்படும் போது, வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் வழங்கப்படும் தேதி வரை 9% வட்டி மொத்த வைப்புத் தொகைக்கு கணக்கிட்ப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
2. குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் கிளைகள் அனைத்திற்கும் அமல் படுத்துவதற்காக இச்சுற்றறிக்கையின் விபரங்களை அவர்களுக்கு அறிவிக்கவும்.
3. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
நம்பிக்கையுள்ள
K. பாலு
துணைப்பொது மேலாளர்