டிசம்பர் 15, 2016 வியாழக் கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றக்குழுவின் 562-வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இணை ஆளுநர்கள் திரு. R. காந்தி, திரு.S.S.முந்த்ரா மற்றும் திரு N.S.விஸ்வநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தவிரவும் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு.பரத் தோஷி, திரு. சுதிர் மன்கட் போன்ற மத்திய மன்ற இயக்குநர்களும் உடன் இருந்தனர். அரசாங்க நியமன இயக்குநரான திருமதி அஞ்சலி சிப் துகல், (செயலாளர், நிதிச்சேவைகள் துறை, நிதி அமைச்சகம்) உடன் இருந்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, சர்வதேச மற்றும் உள்நாட்டிலுள்ள சவால்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் ஆகியவற்றை மத்திய நிர்வாக மன்றக் குழு மறு ஆய்வு செய்தது.
பின்னர், ஆளுநர் மேற்குவங்க முதல்வரை சந்தித்து, அந்த பிராந்தியத்திற்குரிய சில பிரத்யேக பிரச்சனைகள் குறித்து அவருடன் விவாதித்தார்.
(அஜித் பிரசாத்) உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1539
RbiTtsCommonUtility
प्ले हो रहा है
கேட்கவும்
LOADING...
0:062:49
Related Assets
RBI-Install-RBI-Content-Global
RbiSocialMediaUtility
இந்த பக்கத்தை பகிரவும்:
இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!
RbiWasItHelpfulUtility
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?நன்றி!
மேலும் விவரங்களை வழங்க விரும்புகிறேன்?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!