RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

FAQ DetailPage Breadcrumb

RbiFaqsSearchFilter

Content Type:

Category Facet

வகை

Custom Facet

ddm__keyword__26256231__FaqDetailPage2Title_en_US

முடிவுகளை தேடுக

ஏடிஎம்/ஒயிட் லேபிள் ஏடிஎம்

பதில். ஏடிஎம் என்பது கணினிமயமாக்கப்பட்ட இயந்திரமாகும், இது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்குச் செல்லத் தேவையில்லாமல், அவர்களது கணக்கை தொடர்பு கொண்டு பணத்தை வழங்குதல், இதர நிதி சேவைகள் மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை சேவைகளைத் தருகிறது.

பதில். வங்கிசாரா நிறுவனங்கள் அமைத்து இயக்கும் ஏடிஎம்களுக்கு டபிள்யூஎல்ஏ என்று பெயர். வங்கிசாரா நிறுனங்கள் இயக்கும் ஏடிஎம்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் பேமெண்ட் அண்டு செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் ஆக்ட் 2007ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட டபிள்யூஎல்ஏ இயக்கங்கள் பற்றிய பட்டியல் ஆர்பிஐயின் இணையதளத்தில் கிடைக்கிறது:

பதில். ஒரு வாடிக்கையாளருக்கு டபிள்யூஎல்ஏ பயன்பாடு மற்ற வங்கிகளின் (கார்டு வழங்கும் வங்கியைத் தவிர) ஏடிஎம் செயல்பாடு போலவேதான் இருக்கும். ஆனால் டபிள்யூஎல்–களில் ரொக்க டெபாசிட்டுகள் இதர மதிப்புக்கூடுதல் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

பதில். ஒயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க வங்கி சாராத நிறுவனத்தை அனுமதிப்பதன் அடிப்படைக் காரணம் வாடிக்கையாளருக்கான சேவையை அதிகரிப்பது / மேம்படுத்தப்படுத்துவது ஆகும். மேலும் வாடிக்கையாளர் சேவைக்காக கிராமப்புறங்களில் பரவலாக ஏடிஎம்களை அமைப்பதகும்.

பதில். ரொக்கம் வழங்குதலைத் தவிர, ஏடிஎம்கள்/டபிள்யூஎல்ஏக்கள் இதர பல சேவைகளை/வசதிகளை வழங்குகின்றன. இவற்றில் அடங்கிய சில:

  • கணக்கு பற்றிய விவரங்கள்
  • ரொக்கம் டெபாசிட் செய்தல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
  • பில்களுக்கு வழக்கமாக பணம் செலுத்துதல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
  • மொபைல்களுக்கு ரீலோடு வவுச்சர் வாங்குதல் (டபிள்யூஎல்ஏகளில் அனுமதி இல்லை)
  • சிறு/குறு கணக்கு அறிக்கைகளை உருவாக்குதல்.
  • பின் மாற்றம்
  • காசோலை புத்தகம் கோருதல்.

பதில். வழங்குவோர் அனுமதித்துள்ளபடி ஏடிஎம் / ஏடிஎம் கம் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை பல்வேறு பரிவர்த்தனைகளுக்காக ஏடிஎம்கள் / டபிள்யுஎல்ஏக்களில் பயன்படுத்தலாம்.

பதில். ஏடிஎம் / டபிள்யுஎல்ஏவில் பரிவர்த்தனை செய்வதற்கு , வாடிக்கையாளர் செல்லுபடியாகும் கார்டு மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (பின்) வைத்திருக்க வேண்டும்.
பதில். வங்கி கார்டை வழங்கும்போது, வங்கி வாடிக்கையாளருக்கு தனியாக அஞ்சல் வழியாக/தனிப்பட்ட முறையில் வழங்கும் எண்களின் பாஸ்வேர்டுதான் பின். பெரும்பாலான வங்கிகள் வழங்கிய பின்–ஐ முதல் முறை பயன்படுத்திய பிறகு வாடிக்கையாளர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பின்–ஐ வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்கள் உட்பட யாருக்கும் சொல்லக்கூடாது. மேலும் வாடிக்கையாளர்கள் பின்–ஐ அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.
பதில். முடியும், இந்தியாவில் வங்கிகளால் வழங்கப்பட்ட கார்டுகளை நாட்டில் எந்த ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ–களிலும் பயன்படுத்தலாம்.
பதில். கார்டு வழங்கிய வங்கியின் ஏடிஎம்மில் செய்யப்படும் பரிவர்த்தனை ஆன்-அஸ் பரிவர்த்தனை என அழைக்கப்படுகிறது. கார்டு வழங்கிய வங்கி அல்லாத வேறு வங்கியின் ஏடிஎம்மில் செய்யப்படும் பரிவர்த்தனை அல்லது டபிள்யுஎல்ஏவில் செய்யப்படும் ஒரு பரிவர்த்தனை ஆஃப்-அஸ் பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, வங்கி A இன் கார்டை வங்கி A இன் ஏடிஎம்மில் பயன்படுத்தினால், அது ஆன்-அஸ் பரிவர்த்தனை; வங்கி A ஆல் வழங்கப்பட்ட கார்டை டபிள்யூஎல்ஏ அல்லது வங்கி B இன் ஏடிஎம்மில் பயன்படுத்தினால், அது ஆஃப்-அஸ் பரிவர்த்தனை ஆகும்.

பதில். இருக்கிறது. நவம்பர் 01, 2014 முதல் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கி குறைந்தபட்ச எண்ணிக்கையில் பின் வரும் படி இலவச பரிவர்த்தனைகளை வழங்கவேண்டும்.

  • எந்த ஒரு இடத்திலும் இருக்கும் வங்கியின் சொந்த ஏடிஎம்களில் (ஆன்–அஸ் பரிவர்த்தனைகள்): வங்கிகள் அவர்கள் ஏடிஎம்கள் எங்கிருந்தாலும் தமது சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து பரிவர்த்தனைகளை ( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
  • மெட்ரோ நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): ஆறு மெட்ரோ நகரங்களில் அதாவது மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத் நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் மூன்று இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவதர்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
  • மெட்ரோ அல்லாத நகரங்களில் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் (ஆஃப்–அஸ் பரிவர்த்தனை): மேலே சொல்லப்பட்ட ஆறு மெட்ரோ நகரங்களைத் தவிர இதர இடங்களில் உள்ள வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் வங்கி தனது சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை( பணம் மற்றும் பணம் சாரா பரிவர்த்தனைகள் உட்பட) இலவசமாக வழங்க வேண்டும்.
பதில். ஏடிஎம்களில் குறைந்தபட்ச இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை ஆர்பிஐ கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகள் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.

பதில். பிஎஸ்பிடிஏ–களுக்கு மேற்கண்ட விதிகள் பொருந்தாது. ஏனென்றால் பிஎஸ்பிடிஏ–களுக்கு பணம் எடுப்பதற்கான நிபந்தனைகள் இருக்கின்றன.

பதில். மேலே சொல்லப்பட்டுள்ளபடி ஏடிஎம்–ல் செய்யப்படும் இலவச பரிமாற்றங்களில் பணம் மற்றும் பணம் அல்லாத பரிமாற்றங்களும் அடங்கும்.
பதில். ஏடிஎம்–களை நிறுவும் வங்கிகள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் தமது ஏடிஎம்களிலும் அது மெட்ரோ நகரத்தில் உள்ளதா அல்லது மெட்ரோ அல்லாத நகரத்தில் உள்ளதா என்று உரிய விதத்தில் (ஏடிஎம்–ல் அறிவிப்பு/ ஸ்டிக்கர்/போஸ்டர் போன்றவை) எழுதி வைக்க வேண்டும்.இதன் மூலம் வாடிக்கையாளர் தனக்கு கிடைக்கும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள முடியும்.
பதில். ஆம், கட்டாயமான இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ( மேலே கேள்வி 11க்கு அளிக்கப்பட்ட பதிலின்படி) வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் வங்கி விதிக்கும் இந்த கட்டணங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ₹20/–க்கு (மற்றும் வரிகள் ஏதேனும் இருந்தால் அவை உட்பட) மிகாமல் இருக்க வேண்டும்.
பதில். பணம் எடுப்பதற்கான பின் வரும் வகையிலான பணம் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணங்களை வங்கிகள் தாமே தீர்மானித்துக் கொள்ளலாம்: (a) கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தல் (b) வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்–ல் பணம் எடுத்தல்.
பதில். கார்டு வழங்கிய வங்கியின் ஏடிஎம் இல்/ வேறு வங்கியின் ஏடிஎம் இல்/ டபுள்யூஎல்ஏ–வில் பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர் உடனடியாக கார்டு வழங்கிய வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும்.
பதில். தவறிய/ சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளை பற்றி புகார் செய்வதற்காக வங்கிகள் தமது ஏடிஎம் உள்ள இடங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரியின் பெயர்/ தொலைபேசி எண்/டோல் ஃப்ரீ எண்கள்/ ஹெல்ப் டெஸ்க் எண்கள் போன்றவற்றை அறிவிப்பில் காட்டியிருக்க வேண்டும். அதே போல டபுள்யூஎல்ஏ–விலும் அதிகாரியின் தொலைபேசி எண்/டோல் ஃப்ரீ எண்கள்/ ஹெல்ப் லைன் எண்கள் போன்றவற்றை அறிவிப்பில் காட்டியிருக்க வேண்டும்.
பதில். ஆர்பிஐ வழிமுறைகளின்படி (டிபிஎஸ்எஸ் பிடி எண் 2632/02/10.002/2010–2011 தேதி மே 27, 2011), ஏடிஎம்–ல் தவறிய பரிவர்த்தனைகளுக்கான புகாரை கார்டை வழங்கிய வங்கி 7 வேலை நாட்களுக்குள் பணத்தை மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் கிரெடிட் செய்து தீர்க்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதில். ஆம், ஜூலை 1, 2011 முதல், தவறிய ஏடிஎம் பரிவர்த்தனை பற்றி வாடிக்கையாளரின் புகார் வந்த தேதியிலிருந்து அவரின் கணக்கில் பணத்தை மீண்டும் கிரெடிட் செய்வதற்கு 7 வேலை நாட்களுக்கு மேல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் கார்டை வழங்கிய வங்கி ரூ.100 நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வாடிக்கையாளர் கோராமலேயே இந்த தொகை அவரது கணக்கில் கிரெடிட் செய்யப்படவேண்டும். இருப்பினும் நஷ்ட ஈட்டைப் பெறுவதற்காக பரிவர்த்தனை நடந்த 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் புகார் அளிக்க வேண்டும்.
பதில். வங்கியிடமிருந்து பதில் வந்து 30 நாட்களுக்குள் அல்லது புகார் அளித்த 30 நாட்களுக்குப் பிறகும் வங்கியிலிருந்து பதில் வரவில்லை என்றால், வாடிக்கையாளர் வங்கி குறை தீர்ப்பாளரின் உதவியை அணுகலாம். வங்கி குறை தீர்ப்பாளரின் அலுவலகம் விவரங்களின் பட்டியல் இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது: https://rbi.org.in/Scripts/AboutUsDisplay.aspx?pg=BankingOmbudsmen.htm
பதில். ஏடிஎம் கார்ட்டின் வேலிட்டிட்டி காலாவதி ஆனாலோ அல்லது அதற்கான கணக்கு மூடப்பட்டாலோ அந்த கார்டை மாக்னடிக் ஸ்ட்ரிப்/ சிப் வழியாக நான்கு துண்டுகளாக வெட்டி அதை அப்புறப்படுத்த வேண்டும்.

பதில். வாடிக்கையாளர்கள் தனது ஏடிஎம்/ டபிள்யூஎல்ஏவில் பாதுகாப்பாக பரிவர்த்தனைகளுக்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வாடிக்கையாளர் தனது ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ பரிவர்த்தனைகளை மிக ரகசியமாக செய்ய வேண்டும்.
  • ஒரே நேரத்தில் ஒரு கார்டுதாரர் மட்டுமே ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ கியோஸிற்குள் நுழைய வேண்டும்.
  • கார்டுதாரர் தனது கார்டை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
  • கார்டுதாரர் தனது பின்–ஐ கார்டில் எழுதி வைக்கக்கூடாது.
  • கார்டுதாரர் தனது பின்–ஐ யாருக்கும் சொல்லக்கூடாது.
  • ஏடிஎம்–ல் கார்டை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர் யாரும் பார்க்காதவாறு தனது பின்–ஐ உள்ளிட வேண்டும்.
  • யாரும் சுலபமாக ஊகிக்கும் வகையிலான பின்–ஐ கார்டுதாரர் பயன்படுத்தக்கூடாது.
  • கார்டுதாரர் தனது கார்டை ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ–வில் ஒருபோதும் விட்டுவிட்டு வரக்கூடாது.
  • வாடிக்கையாளர் ஏடிஎம்/ டபிள்யூஎல்ஏ–வில் செய்யும் பரிவர்த்தனைகள் பற்றிய செய்தியை பெறுவதற்கு கார்டு வழங்கும் வங்கியில் தனது மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். கணக்கில் அங்கீகாரமற்ற கார்டு பயன்பாடு காணப்பட்டால், அதுபற்றி உடனடியாக கார்டு வழங்கிய வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
  • ஏடிஎம்/டபிள்யூஏ–வில் ஏதாவது கூடுதல் கருவி(கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா என்று கார்டுதாரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் விவரங்களை மோசடி செய்து பெறுவதற்காக இந்த கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை காணப்பட்டால் அது பற்றி அங்குள்ள பாதுகாவலருக்கு/வங்கிக்கு/ டபிள்யூஎல்ஏ வைத்துள்ள நிறுவனத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
  • ஏடிஎம்/டபிள்யூஎல்ஏ–களில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் தென்படுகிறதா என்று கார்டுதாரர் கண்காணிக்க வேண்டும். ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்யும்போது முன்பின் தெரியாதவர்கள் உங்களிடம் பேச்சுக் கொடுத்தாலோ, அல்லது பரிவர்த்தனைக்கு உதவி செய்ய முன்வந்தாலோ அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்.
  • வங்கி ஊழியர்கள் ஒருபோதும் உங்கள் கார்டு விவரங்கள் அல்லது பின் போன்றவற்றை தொலைபேசியிலோ/ மின்னஞ்சலிலோ கேட்கவே மாட்டார்கள். எனவே வங்கியின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எவரிடமிருந்தும் அவ்வாறான கோருதல்கள் வந்தால் கார்டுதாரர்கள் அதற்கு பதிலளிக்கக் கூடாது.
பதில். வாடிக்கையாளர் உடனே கார்டு வழங்கிய வங்கியை தொடர்பு கொண்டு கார்டு இழப்பு/திருட்டு பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த கார்டை தடை செய்யச் சொல்ல வேண்டும்.
பதில். மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டில் தகவல்கள் மாக்னடிக் ஸ்ட்ரிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். அதே சமயம் இஎம்வி மற்றும் பின் கார்டுகளில் தகவல்கள் சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகளுடன் ஒப்பிடும்போது இஎம்வி மற்றும் பின் கார்டுகள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகின்றன.

பதில். வங்கிகள் தற்போதுள்ள மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகள் அனைத்தையும் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் இஎம்வி மற்றும் பின் கார்டுகளாக மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் மாக்னடிக் ஸ்ட்ரிப் கார்டை மாற்றி இஎம்வி மற்றும் பின் கார்டு தரவில்லை என்றால் அவர் உடனே தனது வங்கிக் கிளையை அணுகி அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.


அடிக்கடி கேட்கப்படும் இந்த கேள்விகள் இந்திய ரிசர்வ் வங்கியால் தகவல் மற்றும் பொது வழிகாட்டுதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் / அல்லது அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு வங்கி பொறுப்பேற்காது. ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் அல்லது விளக்கங்களுக்கு, அவ்வப்போது அது தொடர்பாக வங்கியால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளால் ஒருவர் வழிநடத்தப்படலாம்.

Web Content Display (Global)

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்